இந்த ஆவாஷபரி பாயிண்ட் எனும் மலைக்காட்சி தளத்திலிருந்து மிக அற்புதமான மலைக்காட்சிகளை காண முடியும். இது மத்தியப்பிரதேச மாநில எல்லைக்கு வெகு அருகில் அமைந்துள்ளது.
இதற்கு அருகாமையிலேயே உள்ள ஜலிந்தரநாத் கோயில் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். அது தவிர வரலாற்று ஆர்வலர்களுக்கு பிடிக்கும் வகையில் கோண்டு ராஜா கோட்டையும் இங்கு அருகில் அமைந்துள்ளது.