தரங்கம்பாடியின் கவி பாடும் கடற்கரை உங்கள் துன்பங்களை ஆறுதலாக துடைத்து வீசும் சக்தியுடைய இடமாகும். சோழமண்டல கடற்கரையில் அமைந்துள்ள இந்த ரத்தினம் போன்ற கடற்கரை இன்னமும் முழுமையாக வளர வேண்டிய மற்றும் ஆராயப்பட வேண்டிய இடமாகும்.
பல்வேறு பட்ஜெட் விடுதிகளையுடைய தரங்கம்பாடி நகரத்தின், தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள 'கடற்கரை பங்களா' என்ற புகழ் பெற்ற விடுதியை நீம்ரானா ஹோட்டல் குழுவினர் நடத்தி வருகின்றனர்.
இவ்விடம் காரைக்காலிலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பல்வேறு வகைகளான தீபகற்ப உணவுகளை சுவைத்திட மிகவும் ஏற்ற இடமாக இந்த விடுதி அமைந்துள்ளது.
மேலும் இந்த கடற்கரையும் என்பொழுதும் நினைவில் நிற்கும் இடமாக அழகுடன் உள்ளது. நடனமாடும் அலைகள் ஒரு புறம் மற்றும் சூரியன் மறு புறம் என இரண்டு பக்கங்களிலுமே இக்கடற்கரை நீண்டிருக்கிறது.
அமைதியான மற்றும் அழகான சூழலில் அமைந்துள்ள இக்கடற்கரை சோர்ந்த மனதிற்கு புத்துணர்ச்சியூட்டும். சில நூற்றாண்டுகளாகவே இங்கு குடியேறியுள்ள கிறித்தவ மிஷனரிகளால் கட்டப்பட்ட தேவாலயங்களும் இந்த கடற்கரையில் உள்ளன.