நீங்க பேயை மீட் பண்ணிருக்கீங்களா..அப்போ இங்க வந்தா நீங்க பேயை பாக்கலாம்
இந்தியாவின் பழம்பெரும் நம்பிக்கைகளுக்கு உள் சென்றால் நீங்களும் வித்தியாசமாக சிந்திக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.
வெள்ளிக்கிழமை 13ம் தேதி பெங்களூருவில் பேய்கள் செய்த அட்டூழியத்தை காணுங்கள்
ஆவிகள், பேய்கள் என்ற ஒன்று இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை தெரியாத நிலையில், கடவுள் என்ற ஒன்று இருக்குமானால் அமானுஷ்ய சக்திகளும் இருக்கும் என்று விடை தருகின்றனர் சிலர். கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் பேய் என்றால் பயந்து நடுங்குகிறோம். பேய் இல்லை என்று நண்பர்களிடையே விவாதித்து விட்டு வீட்டுக்கு ஏழு மணிக்கே சென்றாலும் மரத்தடியிலும், மன இருட்டிலும் பேய் ஒளிந்திருப்பதாகவே உணர்கிறோம்.
நிஜப் பேயை பார்க்கணுமா அப்போ இங்கெல்லாம் டிராவல் பண்ணுங்க
கடவுள் நம்பிக்கை அற்ற ஒருவருக்கு கூட பேய் பயம் இருக்கிறது என்றால் அது மூளை சம்பந்தப்பட்ட விசயம். ஆனால் இந்த இடங்களில் நிஜமாகவே பேயை காணலாம். பேய் ஓட்டும் முறையை கண்டால் உங்களுக்கே ஒரு நிமிடம் இதயம் உறைந்துவிடும். வாருங்கள் இந்தியாவின் பேய் ஓட்டும் இடங்களை பார்க்கலாம்.
மகந்திப்பூர் பாலாஜி கோயில் ராஜஸ்தான்
ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோயில் அமானுஷ்ய நிகழ்வுகளை விரட்டுவதற்கு ஏற்ற கோயிலாகும்.
மகந்திப்பூர் பாலாஜி கோயில்
இங்கு பேயை ஓட்டுவதற்காக முகத்தில் சுடு நீர் வீசப் படுகிறது. கொதிக்க கொதிக்க நீரை ஊற்றினாலும் முகத்துக்கு எதுவும் ஆகாது என்பது சிறப்பாகும்.
wiki
மகந்திப்பூர் பாலாஜி
மற்ற மாநிலங்களிலிருந்தும் இங்கு பேய் ஓட்டுவதற்காக மக்கள் வருகின்றனர்.
wiki
ஹஸ்ராட் சயத் அலி மிரா தடர் தர்கா, குஜராத்
குஜராத் மாநிலத்தின் யுனிவா கிராமத்தில் அமைந்துள்ளது இந்த தர்கா.
ஹஸ்ராட் சயத் அலி மிரா தடர் தர்கா
இங்கு மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், பேய் வந்து ஆடுபவர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.
மிரா தடர் தர்கா
இங்கு நிச்சயம் குணப்படுத்திவிடுவார்கள் என்பது இவர்களின் நம்பிக்கை.
ஸ்ரீ கஸ்டபஜன் தேவ் ஹனுமான்ஜி மந்திர், குஜராத்
மிகவும் சக்தி வாய்ந்த கோயில் ஆகும். ஹனுமான் கோயிலில் பேய் ஓட்டுவது என்பது மிக சிறப்பானது.
ஸ்ரீ கஸ்டபஜன் தேவ் ஹனுமான்ஜி மந்திர்
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், அமானுஷ்யத்தைக் கண்டு அஞ்சியவர்கள் இங்கு அழைத்து வரப்படுகிறார்கள்,.
ஹனுமான்ஜி மந்திர்
இங்கு தரப்படும் பிரசாதம் உள்ளிட்ட அனைத்தும் மிகவும் விசேசமாக கருதப்படுகிறது.
தேவ்ஜி மகராஜ் மந்திர், மபி
கையில் கற்பூரம் ஏற்றி வழிபடுவது இங்கு வாடிக்கையாகிறது. அப்படி செய்தால் பேய் தன்னை விட்டு விலகும் என்பது நம்பிக்கை.
தேவ்ஜி மகராஜ் மந்திர்
மத்தியப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது இந்த கோயில்.
மகராஜ் மந்திர்
துடைப்பத்தால் அடித்து பேயை ஓட்டுவது இக்கோயிலின் சிறப்பு.
தத்தாத்ரேயா மந்திர், கனகபூர்
வித்தியாசமான வேண்டுதல்களுக்கு பெயர் பெற்ற இந்த கோயில் கனகபூரில் அமைந்துள்ளது.
தத்தாத்ரேயா மந்திர்
அந்தரத்தில் தொங்கும் வேண்டுதல் இங்கு பிரசித்தி பெற்றது. மக்கள் கடவுளிடம் கத்தி வேண்டுவது சிறப்பு. முணுமுணுத்தல், அலறுதல் முதலிய சத்தங்களை கேட்கலாம்.
தத்தாத்ரேயா
பக்தர்கள், பேய் பிடித்தவர்கள் அந்தரத்தில் தொங்கி நேற்றிக்கடன் செலுத்துகின்றனர்.
நிஜாமுதீன் தர்கா, தில்லி
தில்லியில் அமைந்துள்ள இந்த தர்கா பேய் ஓட்டுவதற்கு உலக புகழ் பெற்றது.
நிஜாமுதீன் தர்கா
உலகின் பல்வேறு இடங்களிலிருந்தும் பலர் வந்து இந்த விசித்திர நிகழ்வுகளைப் பார்வையிட்டுச் செல்கின்றனர்.
நிஜாமுதீன் தர்கா
ஒரு அறையில் அடைத்து வைத்து பேயை ஓட்டுகின்றனர் இந்த தர்காவில்...
சாண்டி தேவி கோயில், ஹரித்வார்
வராத்திரி தினங்களில் இந்த கோயில் மிகவும் சிறப்பாக இருக்கும்.
சாண்டி தேவி கோயில்
கெட்ட ஆவிகளை விரட்ட இந்த கோயிலில் விசேச வழிபாடு, செயல் முறைகள் கடை பிடிக்கப்படுகின்றன.
சாண்டி தேவி கோயில்
நவராத்ரி தினங்களில் இந்த கோயில் சாண்டியம்மன் மிகவும் ஆக்ரோசமாக இருப்பார் என்கின்றனர் பக்தர்கள்
ஹர்சு பிரம் கோயில், பிகார்
பிகார் உத்தரப்பிரதேச மாநில எல்லையில் அமைந்துள்ளது இந்த கோயில்.
ஹர்சு பிரம் கோயில்
துஷ்ட சக்திகளை விரட்டுவதற்கு சிறப்பான இந்த கோயில் பலருக்கு விருப்பமான இடமாக இருக்கிறது.
ஹர்சு பிரம் கோயில்
இந்த கோயிலுக்கு ஒரு முறை வந்தால் திரும்பவும் வரவேண்டிய அவசியம் இருக்காது என்கின்றனர் சிலர்.
சண்ட் சபீர் ஷா தர்கா, ஜெய்ன்பூர்
சுவரைக் கட்டிப்பிடித்து சங்கிலித் தொடராக நின்று பேயை ஓட்டுகின்றனர்.
சண்ட் சபீர் ஷா தர்கா
இந்த ஊருக்கு செய்ன்பூர் என்று பெயர் வந்தது இதான் காரணமாக இருக்கலாம்.
சண்ட் சபீர் ஷா தர்கா
பயம் மிகுந்த இடமாக உள்ள இந்த தர்காவுக்கு நீங்கள் சென்றால் பின்னங்கால் பிடதியில் அடிக்க ஓடி வருவது நிச்சயம்.