இன்ப அதிர்ச்சியூட்டும் கிராமிய இடம் தான் இந்த சிலிகுரியாகும். இங்கே காணப்படும் இயற்கையின் மயக்கும் அழகும், கால நிலையும் வரும் சுற்றுலா பயணிகளின் மனதினை மாற்றி இன்னும் சற்று நேரம் இருக்கலாமே என்ற ஆர்வத்தினை தூண்டுகிறது. இந்த இடமானது, கிழக்கே காணப்படும் வலிமைமிக்க இமயமலைக்கும், மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்க் மாவட்டத்திலுள்ள அழகிய நதியான மகாநதி ஆற்றங்கரையின் அடிவாரத்திலும் காணப்படுகிறது. இந்த சிலிகுரி நாம் ஆராய்ந்து ஆச்சரியப்படவைக்கும் பல அதிசய இடங்களை கொண்டுள்ளது.
இந்த இடம் மிகவும் பிரசித்திபெற்று பல வழிகளை கொண்டிருக்க, அதன் வழியே மேற்கு வங்காளத்தின் சில அழகிய மலைப்பகுதிகளையும் நம்மால் பார்க்க முடிகிறது. மற்ற மலைகள் காணும் இடங்களிலிருந்து இணைப்பானது அட்டகாசமாக காணப்பட மேற்கு வங்காளத்தின் இரண்டாவது பெரிய நகரமும் இதுவேயாகும். டெட்ராலஜியின் டிஎஸ் எனப்படும் தேயிலை, மரம், சுற்றுலா, போக்குவரத்திற்கும் பிரசித்திபெற்ற ஒரு இடமாக இவ்விடம் விளங்குகிறது என உள்ளூர் வாசிகளின் மூலம் நமக்கு தெரிய வருகிறது.
நான் ஏற்கனவே கூறியதைபோல், எண்ணற்ற இயற்கை அழகு சூழ்ந்திருக்கும் இந்த சிலிகுரி, பயணத்துக்கு ஏற்ற இடமாகவும் விளங்குகிறது. என்னுடைய கடந்த கோடைக்கால விடுமுறையின் போது மலையேறுவது பற்றிய பயிற்சிக்காக HMIக்கு நான் டார்ஜிலிங்க் செல்ல திட்டமிட்டிருந்தேன்.
இந்த சிலிகுரி அழகிய மலைப்பகுதி என்பதையும் நான் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால், என்னுடைய பயிற்சியானது முடிந்தபின்பு இங்கே வரவேண்டுமெனவும், அதன் பிறகு சிக்கிம் செல்லலாம் எனவும் திட்டமிட்டிருந்தேன். அதனால், நான் திரும்பியபொழுது...கலிம்பொங்கில் சில நாட்கள் செலவழித்து, சாலையின் வழியாக சிலிகுரியை அடைய வேண்டுமெனவும் முடிவெடுத்தேன். இது நல்ல யோசனையாக எனக்கு தோன்ற, இந்த அழகிய காட்சிகளை கண்டபடியே என் பயணத்தில் மெய் சிலிர்த்து மகிழலாம் எனவும் நான் முற்றிலும் நம்பினேன். நீங்களும் நம்புங்களேன்...
கலிம்பொங்கிலிருந்து சிலிகுரிக்கு ஓர் பயணம்:
என்னுடைய காலை உணவை முடித்து கொண்ட நான் கலிம்பொங்கிற்கு வாடகை காரில் கிளம்பினேன். கலிம்பொங்கிலிருந்து சிலிகுரிக்கு 70 கிலோமீட்டர்கள் ஆகிறது. இந்த 70 கிலோமீட்டரை நாம் கடக்க, சுமார் 5 மணி நேரம் தேவைப்படுகிறது. 70 கிலோமீட்டரை கடக்க ஐந்து மணி நேரம் என்றால்...நீங்களே யூகித்துக்கொள்ளுங்களேன். இவ்வழியில் நாம் செல்லும்பொழுது பார்க்க வேண்டிய இடங்கள் எவ்வளவு இருக்கிறது என்பதை இந்த நேர அவகாசமே நமக்கு தெளிவாய் உணர்த்துகிறது அல்லவா!
நான் உள்ளூர் வாசிகளுடன் தேனீர் அருந்தி முடிவற்ற காரசாரமான விவாதம் தொடர, அது எங்களுக்குள் பலவித பயண தொடர்பை தூண்டியது. மேலும், இந்த பயணத்தை என் வாழ்க்கையில் ஒருபோதும் மறக்க இயலாது என்ற மனப்பான்மையையும் அவர் தந்த விளக்கங்கள் என் மனதில் ஏற்படுத்தியது.
அதனால், தோராயமாக காலை 10.30மணிக்கு கார் வர, நான் தங்கிய வீட்டிலிருந்து கிளம்பினேன். ஷெர்ப்பா ஹவுஸ் எனப்படும் அதனை நிறைந்த மனதுடன் நான் பார்க்க, சிலிகுரியை பற்றிய ஆர்வம் என்னுள் தொற்றிக்கொண்டது. இருப்பினும் கலிம்பொங்க் மக்களின் அன்பினால் நிறைந்த என் மனம் சிலிகுரி மக்களின் அன்பு தங்க இடமற்று திண்டாடி தான் தவித்தது.
Dibesh Thakur
முதல் நிறுத்தம் – டீஸ்டா பள்ளத்தாக்கு தேயிலை தோட்டம்:
என்னுடைய முதல் நிறுத்தமாக...ராங்க்லி ராங்க்லியோட் டேசில் எனப்படும் இடத்தில் காணும் டீஸ்டா பள்ளத்தாக்கு தேயிலை தோட்டத்தில் என்னுடைய பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் வரை நான் செலவிட்டு, அதன் அழகை ஆராய, அங்கே நான் சுவாசித்த தேயிலை மனமானது என் மனதில் மகிழ்ச்சியை பொங்க செய்ததோடு நுரையீரலையும் குஷிப்படுத்தியது.
அங்கே நாம் ஒரு சில புகைப்படங்களை அழகாக எடுத்து மனதில் நினைவை தேக்கிகொண்டு கிளம்ப, 1841ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதோர் பழமையான தேயிலை தோட்டங்களுள் ஒன்று இது என்பதும் நமக்கு தெரிய வருகிறது. இங்கே காணப்படும் சிறந்த தேயிலையை ஜப்பான், ரஷ்யா, ஜெர்மனி, ஹோலாந்து, ப்ரான்ஸ், லண்டன், அமெரிக்கா, சிங்கப்பூர், ஹவாலி ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக தெரிய வருகிறது.
இதனை விட அழகினை என்னால் காண இயலுமோ என என் மனம் அடுத்த இடத்தை காணும் வரை ஏங்கி தான் தவித்தது. இருப்பினும் நான் சென்ற வழியில் காணப்பட்ட, பச்சை பசேலென காட்சிதரும் தசிடிங்க் காடு, சாலையில் ஓடும் டீஸ்டா நதியென நான் செல்லுமிடமெல்லாம் என் சிந்தையை கட்டிப்போட்டு அழகால் மனதை வருடியது அந்த இடம்.
நீங்கள் ஒரு புகைப்பட ஆர்வலராக இருப்பின், கண்டிப்பாக இந்த இடத்தை காண ஒரு முறையாவது வந்து, இங்கே காணும் அழகிய காட்சியை உங்கள் கேமராவில் பதிவு செய்து மனதில் நினைவை தேக்கி கொண்டு திரும்பி மனமகிழலாம்.
Srishti Manna
இரண்டாவது நிறுத்துமிடம் – டர்பின் டரா:
கலிம்பொங்கிலிருந்து ஐந்து கிலோமீட்டர் செல்ல, டர்பின் டராவில் வண்டியை நிறுத்தினேன். இந்த இடம், 4200அடி உயரத்தில் காணப்பட, இங்கே பிரசித்திபெற்ற பல இடங்களை நம்மால் பார்க்க முடிகிறது. இங்கிருந்து நாம் கவனித்து நோக்குவதன் மூலம் பல இடங்கள் நம் பார்வையில் தென்படுகிறது. இதனை என்னால் வெகு நேரம் பார்க்க முடியாது என்றதொரு ஏக்கமும் கூட. காரணம், இங்கே நான் ஷொங்க் டாக் பல்ரி பொ ப்ராங்க் கொம்பாவில் இன்னும் சில மணி நேரம் அதற்கு இருக்க வேண்டும். இது தான் புதியதாக காணப்படுமோர் அழகிய மடாலயமும் கூட...
shankar s
அடுத்த நிறுத்தம் – சுண்டலேய்:
அடுத்து டாக்ஷி ட்ரைவர் தன்னுடைய கார் டையரில் காற்று சரியான அளவில் இருக்கிறதா? என பார்க்க சுண்டலேயில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் வண்டியை நிறுத்தினார். அனைத்தும் சரியாக சென்றுக்கொண்டிருக்க, இன்னும் கொஞ்ச தூரம் சென்று நிறுத்தி ஓர் உணவகத்தில் நாங்கள் நுழைந்தோம். அந்த உணவகத்தின் பெயர் லோஹாபூல் ஆகும். அந்த உணவகமானது சிறிதெனும், மிகவும் சுத்தமாக, அழகிய முறையில் வைக்கப்பட்டிருக்க, அங்கே சிறந்த தேநீர் ஒன்றை நாங்கள் சுவைத்தோம்.
இங்கே, ஒரு சில உள்ளூர் வாசிகளை நான் சந்திக்க, அவர்களிடம் கால்பந்து விளையாட்டு பற்றிய பல தகவல்களை காரசாரமாக விவாதித்தோம். இந்த கஃபேயிலிருந்து இடங்கள் பார்க்க அற்புதமானதாக அமைய, அந்த குளிர்ச்சி மிகுந்த அழகிய இடமானது மனதினை புத்துணர்ச்சிக்கொள்ள செய்தது. அந்த கஃபேயிலிருந்து புறப்பட்ட நாங்கள் உள்ளூர் இசையை ரசித்துகொண்டிருக்க, என்னுடைய கார் ட்ரைவர் கல்லிஜோரா என்னும் மனதை மயக்கும் குக்கிராமத்தில் காரை நிறுத்தினார்.
prabir_chatterjee
கல்லிஜோரா:
இயற்கை அழகால் அரவணைக்கப்பட்ட இந்த இடம் நாங்கள் நிறுத்தியதற்கான நிமிடத்தை அழகானதாக மாற்ற...வாரவிடுமுறையால், இங்கே உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகையையும் ஆரவாரத்தையும் நம்மால் இங்கே பார்க்க முடிகிறது. என்னுடைய பயணத்தின் இறுதி இலக்கான சிலிகுரியை நான் அடைய இன்னும் 30 கிலோமீட்டர்கள் உள்ள நிலையில் இங்கே இன்னும் சற்று நேரம் ஓய்வில் அமர்ந்து காட்சிகளை கண்டு மனதை இதமாக்கி செல்லலாம் எனவும் நான் முடிவெடுத்தேன்.
அடர்ந்த காடுகளாலும், டீஸ்டா நதியாலும் இந்த இடமானது சூழ்ந்து காணப்பட, நாம் தவிர்க்க கூடாத இடங்களுள் ஒன்றாகவும் இது அமைகிறது. இங்கே தொடங்கும் நம் பயணத்தின் மஹாநந்த வனவிலங்கு சரணாலயத்திற்கு பல வித வெளிநாட்டு சுற்றுலா ஆர்வலர்களும், இந்தியர்களும் வந்து செல்வது வழக்கமாக இருக்கிறது. இங்கே நான் இன்னும் கொஞ்ச நேரம் செலவிடலாம் என நினைத்தாலும் சிலிகுரி செல்ல வேண்டிய நேரத்தை மனதில் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றேன்.
Krushna Sundar
பாரம்பரிய பாக்பூல் பாலம் – நாம் பார்க்க வேண்டியதோர் தளம்:
அதன்பிறகு, என் வழியில் சென்ற நான், வழியில் என் கண்களை கவர்ந்து மனதினை வருடிய பாரம்பரிய பாக்பூல் பாலத்தில் நிறுத்தினேன். இந்த பாலத்தின் நுழைவாயிலில் இரண்டு சிங்க சிலைகள் காணப்பட,இத்தகைய காரணத்தினாலே இவ்விடம் இப்பெயர் பெற்றது எனவும் நமக்கு தெரிய வருகிறது. 1931ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் இந்த பாலம் கட்டப்பட, இன்று வரை இங்கே வருபவர்கள் மனதை கொள்ளைக் கொள்ளும் ஒரு பாலமாக இது விளங்குகிறது.
இந்த பாலத்திலிருந்து நாம் புறப்பட, கலி மந்திரில் வண்டியை நான் நிறுத்தினேன். எனக்கு மிகவும் பசி எடுத்ததோடு, அசதியாகவும் நான் உணர, செவோக்கில் எங்கள் மதிய உணவை நாங்கள் முடித்தோம். சிலிகுரி எல்லையில் அமைந்திருக்கும் இவ்விடம் சிக்கிமிடமும் எல்லையை பகிர்ந்துகொண்டுள்ளது. நாங்கள் மேக்கி, தேநீர், ரொட்டி, வெண்ணெய் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு புறப்பட, மாலை 4 மணிக்கு சிலிகுரியை அடைந்தோம்.
என்னுடைய இந்த நீண்ட நெடிய பயணத்தில் தேக்கிக்கொண்ட நினைவுகள் எண்ணற்றவையாக இருக்க, நான் சென்ற ஒவ்வொரு இடமும் என்னை மிகவும் கவர்ந்து அழகால் மயக்கி மனதை தர மறுத்தது என்றே சொல்ல வேண்டும். நான் நின்று, கண்ட புதியவர்களிடம் மனம் விட்டு பேசி மகிழ அதுவும் எனக்கு புதுவித அனுபவமாய் அமைந்தது. கலிம்பொங்கிலிருந்து சிலிகுரி வரை நான் சென்ற பயணத்தில் பல உள்ளூர் மக்களையும், சுற்றுலா பயணிகளையும் சந்தித்து வர்ணம் பொங்கும் அழகிய இடங்களின் மாயாஜாலத்தை பற்றி பேசி மகிழ, அது எனக்கு சிறந்த சாலை பயணமாகவும் அமைந்தது.
‘நான் இன்னும் ஒரு முறை கண்டிப்பாக இங்கே வருவேன்...' என்னும் மன நிலைப்பாட்டுடன் புறப்பட, மஹாநந்த வனவிலங்கு சரணாலய பயணமும், கல்லிஜோராவிற்கும் மீண்டும் எப்பொழுது வருவேன் என்னும் ஏக்கமும் என்னை பார்த்து ஏளனமாய் முறைத்தது. இந்த பயணத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் கண்ட காட்சிகளால் மனதை பறிக்கொடுக்க, டீஸ்டா நதியில் தொலைந்த என் மனம் என்னுடன் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடியதை எவ்வாறு மறக்க இயலும்? ஒட்டுமொத்தமாக, இயற்கை அன்னையால் நமக்கு தரப்படும் இனிமையான காட்சி விருந்தாக இந்த பயணம் அமைய, ஒவ்வொரு முறையும் என் இதயமானது உருகி சாலையில் வழிந்து வர மறுத்தது என்பதே உண்மை.
arnabbasu