வாழ்க்கையில் நாம் அனைவரும் மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறோம். எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம் என்றே தெரியாமல் ஓடி களைத்து நின்று திரும்புகையில் நமக்கு ஆற்றல் இல்லாமல் போய்விடுகிறது. கல்வியையும், கல்யாணத்தையும் காலாகாலத்துல பண்ணனும்னு சொல்வாங்க.. காலம் கடந்துட்டா அவ்வளவுதான். நீங்க அவுட் ஆஃப் பேஷன் ஆகிடுவீங்க....
லைஃப்ப ஜாலியா என்ஜாய் பண்ண வேண்டும்னா குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருந்து பழகுங்க. நமக்கு துணையா வர்றவங்க மனம் நோகாதபடி நடந்துக்கோங்க. அவங்களுக்கு சின்ன சின்ன இன்ப அதிர்ச்சிகள் கொடுத்து அவங்கள எப்பவும் பூரிப்பிலேயே வைத்துக்கொள்ளுங்க. அலை பேசிக்கும், ஆபிஸ் காலுக்கும் நோ சொல்லிட்டு இரண்டு மூனு நாளு தூரமா யாருக்கும் தெரியாத இடத்துக்கு உங்கள் காதல் உணர்வுகளை வெளிப்படுத்த ஏற்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். அந்த மாதிரியான இடம் தான் கேரளாவில் அமைந்துள்ள அழகிய காடுகள்.
உங்கள் துணையுடன் தனிமையை அனுபவித்து மகிழ கேரளாவில் உள்ள இந்த காடுகளுக்கெல்லாம் சென்று மகிழ்ந்து வாருங்கள்.
எரவி குளம் தேசிய பூங்கா
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையின் உயர் வரையில் ஏறத்தாழ 97 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது எரவிகுளம் தேசிய பூங்கா.
நீலக் குறிஞ்சி மலர்கள்
PC: matthieu aubry
ஆனமுடி
ஆனமுடி மலை
PC: Jaseem Hamza
நாய்க்கொல்லி மலை
நாய்க்கொல்லி மலை
PC: Arunguy2002
மலையேற்றப்பாதை
மலையேற்றப்பாதை
PC: Arun Suresh
நீலகிரி வகை மான்
இயற்கைப் பாதுகாப்பிற்கான அனைத்துலக ஒன்றியத்தின் சிறப்புப் பட்டியலில் உள்ள வரையாடு (நீலகிரி தார்) எனப்படும் மான் இனம் நிலைத்திருக்கத்தக்க வகையில் அதிக எண்ணிக்கையில் இங்கு காணப்படுகிறது.
PC: Anbazhagan Zibiah
பெரியார் தேசிய பூங்கா
பெரியாறு தேசியப்பூங்கா கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.
PC: Wouter Hagens
புலிகள் காப்பகம்
பெரியார் தேசிய பூங்கா இடுக்கி, பத்தனம்திட்டா மாவட்டங்களில் பரவியுள்ளது. இப்பகுதியின் பரப்பளவு 777 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இதில் 350 ச.கி.மீ பெரியாறு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவானது தேக்கடி என்றும் அழைக்கப்படுகிறது.
PC: Anand2202
பெரியார் ஏரி
பெரியார் தேசிய பூங்காவில் காணப்படும் பரந்த ஏரி.
PC: Anand2202
பெரியார் பூங்காவின் அற்புத காட்சி
PC: Anand2202
பூங்காவில் பூத்துக்குழுங்கும் பூக்கள்
வண்ண வண்ண மலர்களால் அழகாக காட்சியளிக்கும் இந்த பூங்கா.
PC: K Hari Krishnan
விலங்குகள்
ஏரியில் நீர் குடிக்க வரும் விலங்குகள், அருகில் புல் தரைகளில் மேய்ந்துகொண்டிருக்கின்றன.
PC: Anand2202
நீலகிரி குரங்கு வகைகள்
நீலகிரி மலைகளில் பரவலாக காணப்படும் குரங்கு வகை.
PC: Anand2202
அபூர்வ வகை மலபார் தவளை
மலபார் பகுதிகளில் மட்டுமே காணப்படும் அரிய தவளை வகை
PC: Anand2202
ஒருவகை பட்டாம்பூச்சி
குழந்தைகள் விளையாடி மகிழ விரும்பும் அழகிய பட்டாம்பூச்சி
PC: wiki
சைலன்டு வேலி தேசிய பூங்கா
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 237 சதுர கிமீ அளவுக்கு பரந்து விரிந்துள்ள ஒரு பூங்கா இதுவாகும். தமிழகத்தின் நீலகிரி மலைக்கு அப்படியே அந்த திசையில் கேரளாவில் அமைந்துள்ளது.
PC: PP Yoonus
தொங்கும் பாலம்
பூங்காவில் காணப்படும் தொங்கும் பாலம். ஒருவித அச்சம் கலந்த சுவாரசியத்துடன் இதை கடந்து செல்வது நல்ல தருணமாக அமையும்.
PC: Cj.samson
அரிய வகை பறவை
பூங்காவில் காணப்படும் அரிய வகை பறவை.
PC: Atanu mondal
தவளை
வேறெங்கும் காண இயலாத ஒரு தவளை இனம் இதுவாகும்.
Pc: David V Raju
வண்ணத்துப்பூச்சி
உடல் எங்கிலும் வண்ணத்தால் காண்போரின் கண்களைக் குளிரச் செய்யும் வண்ணத்துப்பூச்சி.
PC: wiki
ஆனமுடி சோலை தேசிய பூங்கா
PC: fotokannan
மதிகெட்டான் சோலை தேசிய பூங்கா
PC: Ravindraboopathi
பம்படும் சோலை தேசிய பூங்கா
PC: Varkey Parakkal
நெய்யாறு
PC: keralatourism