பிரம்மபுத்திரா நதியில் லோகித் ஆற்றில் 7 ஆண்டுகள் கட்டுமானப் பணியில் இருந்த பாலம் இன்று திறக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் - அருணாச்சலபிரதேசத்தை இணைக்கும் வகையில் தோலா சாடிய பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பாலம் பல சிறப்புகளுக்குரியது. மேலும் அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் பல்வேறு சிறப்புக்குரிய சுற்றுலாத் தளங்கள் உள்ளன. இதனால் இந்த பாலம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
அப்படி சுற்றுலா சிறப்பு மட்டுமல்லாது, நாட்டின் பாதுகாப்புக்கும், கூடவே ஒரு சாதனையையும் சுமந்து நிற்கும் இந்த பாலத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்த மாதத்தின் டாப் 5 அட்டகாசமான கட்டுரைகள் கீழே
தேசிய சாதனை
நாட்டின் மிக நீளமான பாலமாக கருதப்படும் இது 9.15 கி.மீ நீளம் கொண்டது.
பயணதூரம் வெகுவாக குறையும்
இந்த பாலம் கட்டப்பட்டுள்ளதால் பொதுமக்களின் பயண தூரம் வெகுவாக குறையும்
சுற்றுலா மேம்படும்
அஸ்ஸாம் - அருணாச்சல மாநிலங்கள் இடையேயான போக்குவரத்து நேரம் 4 மணி நேரமாக குறையும். இதனால் நாட்டின் சுற்றுலா மேம்பாடு அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எரிபொருள் சேமிப்பு
இதனால் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் மதிப்பிலான எரிபொருட்கள் மிச்சமடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம்
இந்த பாலத்தால் இரு மாநிலங்களுக்கிடையேயான வர்த்தக போக்குவரத்திற்கும் மேம்படும்.
நாட்டின் பாதுகாப்பு
இந்தப் பாலம் மூலம் ராணுவ வீரர்களையும் ராணுவத் தளவாடங்களையும் எல்லைப் பகுதிகளுக்கு விரைவாகக் கொண்டு செல்ல முடியும். மேலும், சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தப் பாலம் உதவும் என்றும் கூறப்படுகிறது.
எவ்வளவு செலவு தெரியுமா?
இந்த பாலம் 950 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
எப்போது தொடங்கியது?
2011-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் 7 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவடைந்தன. வரலாற்று சிறப்பு மிக்க இந்தப் பாலம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
சுற்றுலாத் தளங்கள்
இட்டா நகர், தவாங், ஜிரோ, அலாங், மியாவோ, தேஸூ, பசிகாட் முதலிய இடங்கள் இங்கு மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளங்களாகும்.
இட்டா நகர்
இட்டா நகரில் கங்கா ஏரி, இட்டா ஃபோர்ட், பல்லுயிர் சரணாலயம், ஜவஹர்லால் நேரு அருங்காட்சியகம், பூங்காக்கள் என நிறைய சுற்றுலாத் தளங்கள் உள்ளன.
தவாங்
இந்தியாவின் வடகிழக்குப்பகுதியின் உச்சியில் வீற்றிருக்கும் அருணாசலப்பிரதேச மாநிலத்தின் மேற்கு எல்லையில் இந்த தவாங் மாவட்டம் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10,000 அடியில் கிறுகிறுக்க வைக்கும் உயரத்தில் இந்த தெய்வீக மலை எழிற்பிரதேசம் அமைந்திருக்கிறது. வடக்கில் திபெத்தையும், தென்மேற்கில் பூடானையும், மேற்கில் சேலா மலைத்தொடர்களையும், மேலும் படிக்க
ஜிரோ
ஜிரோ என்ற அழகான சிறிய மலை நகரம் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பழைய நகரங்களில் ஒன்றாகும். நெற்பயிர்களை கொண்ட நிலங்கள் மற்றும் பைன் மரங்களால் சூழ்ந்துள்ளது இந்த நகரம். இந்த வட்டாரத்தில் பரவி கிடக்கும் பெரிய காடான இது பல பழங்குடியினருக்கும் வீடாக அமைந்திருக்கிறது. இந்த அழகிய நகரம் கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு காணப்படும் பல வகையான தாவரங்களும், விலங்கினமும் இயற்கை காதலர்களை கவர் மேலும் தெரிந்து கொள்ள
அலாங்
அருணாச்சல பிரதேசம் மேற்கு ஷியாங் மாவட்டத்தில் மலைகளுக்கு மத்தியில் பல்வேறு சிறிய கிராமங்களை உள்ளடக்கிய ஒரு அழகிய நகரம் அலாங் ஆகும். அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ள இந்த நகரம் யொம்கோ மற்றும் ஸிபு என்கிற இரண்டு மேலும் தெரிந்துகொள்ள
போம்டிலா
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் காண வேண்டிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கும் போம்டிலா என்ற சிறு நகரம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 8000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கிழக்கு இமயமலைத் தொடர்களினூடாக அமைந்திருக்கும் போம்டிலா அற்புதமான சுற்றுப்புறத்தைக் கொண்டிருக்கும் நகரமாகும். இயற்கையழகு மற்றும் ஆப்பிள் தோட்டடங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள போம்டிலாவில் பௌத்த மடாலங்களும் உள்ளன. நிறைய மலையேற்றப் பாதைகளும் உள்ளதால், சாகசம் செய்ய விரும்புபவர்கள் வந்து செல்ல வேண்டிய இடமாகவும் போம்டிலா உள்ளது.
கண்கவரும் அருணாச்சல பிரதேசம்
கண்கவரும் அருணாச்சல பிரதேசம்
கண்கவரும் அருணாச்சல பிரதேசம்
கண்கவரும் அருணாச்சல பிரதேசம்
கண்கவரும் அருணாச்சல பிரதேசம்
கண்கவரும் அருணாச்சல பிரதேசம்
கண்கவரும் அருணாச்சல பிரதேசம்
கண்கவரும் அருணாச்சல பிரதேசம்
கண்கவரும் அருணாச்சல பிரதேசம்
கண்கவரும் அருணாச்சல பிரதேசம்
கண்கவரும் அருணாச்சல பிரதேசம்
கண்கவரும் அருணாச்சல பிரதேசம்
கண்கவரும் அருணாச்சல பிரதேசம்
கண்கவரும் அருணாச்சல பிரதேசம்
கண்கவரும் அருணாச்சல பிரதேசம்
கண்கவரும் அருணாச்சல பிரதேசம்
கண்கவரும் அருணாச்சல பிரதேசம்
கண்கவரும் அருணாச்சல பிரதேசம்
கண்கவரும் அருணாச்சல பிரதேசம்
கண்கவரும் அருணாச்சல பிரதேசம்
கண்கவரும் அருணாச்சல பிரதேசம்
கண்கவரும் அருணாச்சல பிரதேசம்
கண்கவரும் அருணாச்சல பிரதேசம்
கண்கவரும் அருணாச்சல பிரதேசம்
ஆத்தாடி... எத்தன பாம்பு... இது என்ன ராஜநாகங்களின் தலை நகரமா?
பிரிட்டிஷ் பொறியாளரையே குழப்பி விரட்டிய அந்த தொங்கும் தூண் எங்க இருக்கு தெரியுமா?
விலங்குகளாக உருமாறும் அதிசய மரம் .... எங்கே இருக்கிறது தெரியுமா?
3ம் உலகப்போரால் பூமி அழியப்போகிறது கணித்துச் சொன்ன சிவன்மலை கோயில்
ரஜினிகாந்த் செல்லும் குகையின் இந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா?