மாத்தூர் தொட்டிப் பாலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டிப் பாலமாகும்.
இது கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பெயர்பெற்ற சுற்றுலாத்தலமுமாகும். இதன் பெருமைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பெயர் காரணம்
தொட்டி வடிவில் கட்டப்பட்டிருப்பதால் தொட்டிப்பாலம் என அழைக்கப்படுகிறது.
wiki
தொட்டில் பாலம்
இரு மலைகளுக்கு நடுவே தொட்டில் போன்ற அமைப்பில் இருப்பதால் தொட்டில்பாலம் எனவும் அழைக்கப்படுகிறது.
wiki
எப்போது கட்டப்பட்டது?
இப்பாலம் 1969ல் முழுமையாக கட்டப்பட்டு நிறைவுபெற்றது.
wiki
யாருடைய ஆட்சியில்
1962 ம் ஆண்டு தமிழ்நாடு முதல்வராக இருந்த காமராஜரால் தொடங்கப்பட்ட இப்பாலம் 1969ல் முழுமையாக கட்டப்பட்டு நிறைவுபெற்றது.
wiki
என்ன காரணம்
அந்த காலக் கட்டத்தில் தமிழகத்தில் வறட்சி தலைவிரித்தாடியது. இதனால் நீர் பற்றாக்குறை வராமல் தடுக்கவும்,
வறட்சியை தீர்ப்பதற்காகவும் இப்பாலம் கட்டப்பட்டது.
wiki
எங்கிருந்து நீர் வருகிறது
இது பறளியாற்றிலிருந்து வரும் நீரை சுமந்து செல்கிறது.
wiki
மலைகளை இணைக்கும் நீர்பாலம்
இது பறளியாற்றுத் தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
commons.wikimedia.org
நீள அகலம் உலக சாதனை
இரண்டு மலைகளை இணைக்கும் இந்தப் பாலம் நீளவாக்கில் 1204 அடியாகவும், தரைமட்டத்திலுருந்து 104 அடி உயரத்திலும் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு தூணின் சுற்றளவும் 32 அடியாகும். இவ்வாறு மொத்தம் 28 தூண்கள் உள்ளன. தண்ணீர் செல்லும் பகுதிகள் ஏழு அடி அகலமும், ஏழு அடி உயரமும் கொண்ட தொட்டிகளாக தொகுக்கப்பட்டுள்ளன.
என்ன பயன்
அணையிலிருந்து வரும் நீர் முதலில் மாத்தூர் பாலத்திற்கும் அதன்பின் செங்கோடி மற்றும் வடக்குநாட்டுப் பாலங்கள் வழியாக தேங்காய்ப்பட்டணம் கிராமத்திற்கும் செல்கின்றது. மாத்தூர் தொட்டிப் பாலம் வழியாகக் கொண்டுசெல்லப்படும் நீர் கன்னியாகுமரி மாவட்டத்தின் கல்குளம், விளவங்கோடு ஆகிய இரு வட்டங்களில் உள்ள ஊர்களின் நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுகிறது.
எங்குள்ளது
கன்னியாகுமரி மாவட்டம், அருவிக்கரை ஊராட்சி மன்றப் பகுதியில் மாத்தூர் தொட்டிப் பாலம் அமைந்துள்ளது. இது திருவட்டாரிலிருந்து 3 கி.மீ தொலைவிலும் இந்தியாவின் தென்முனையாகிய கன்னியாகுமரியிலிருந்து 60 கி.மீ. தொலையிலும் உள்ளது. இவ்வூர் குழித்துறை இரயில் நிலையத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், திருவனந்தபுரம் வானூர்தி நிலையத்திலிருந்து 70 கி.மீ. தொலைவிலும் அமைந்திருக்கிறது.
உங்கள் பகுதியிலும் சுற்றுலாத் தளங்கள் உள்ளனவா ? அமைவிடம் மற்றும் சிறப்புகள் குறித்த முழுத் தகவலுடன் அந்த இடங்களின் புகைப்படங்களையும் இணைத்து [email protected] என்ற முகவரிக்கு எழுதி அனுப்புங்கள்.