கடவுளர்களாக இருந்தாலும் காதல் யாரைதான் விட்டுவைத்தது. அதிலும் காதல் மன்னன் கிருஷ்ணரை உங்களுக்கு சொல்லியா தெரியவேண்டும்.
கிருஷ்ணர் கோபியர்களின் சேலைகளை திருடி விளையாடிய இடங்களுக்கும், ராதையுடன் ராசலீலைகள் புரிந்த இடங்களுக்கும் ஒரு சுற்றுலா செல்லலாமா?
சென்னையிலிருந்து கிளம்புவதாகக் கொள்வோம். உங்களின் வசதிக்கேற்ப அந்தந்த இடங்களை பொறுத்து நேரத்தை அமைத்துக்கொள்ளுங்கள்.
இந்த மாதம் அல்டிமேட் டாப் 5 கட்டுரைகள்: கீழே
பயணம் தொடங்குகிறது
சென்னை சென்ட்ரலிலிருந்து பயணம் தொடங்குகிறது.
இரவு பத்து மணிக்கு தமிழ்நாடு விரைவு வண்டியை பிடித்து நாக்பூர் சென்றடைய வேண்டும். அங்கிருந்து டெல்லி செல்லும் தெலங்கானா விரைவு வண்டியில் ஏறி காலை 6 மணிக்கெல்லாம் மதுரா சந்திப்பை அடையலாம்.
மதுராவிலிருந்து விருந்தாவனுக்கு பல பேருந்துகள் செல்கின்றன.
கங்கை நதிக்கரை
கங்கை நதிக்கரையில் கிருஷ்ணர் தனது இளமைப்பருவத்தை கழித்த ஸ்தலமாக கருதப்படும் இந்த விருந்தாவன் இந்துக்களுக்கு விருப்பமான யாத்ரீகத்தலமாகும். இந்த இடத்தில்தான் கிருஷ்ணன் கோபியர் சேலைகளை திருடியதாகவும், மற்றும் ராதையுடன் தனது ராசலீலைகளை நிகழ்த்தியதாகவும், தெய்வீக நடனங்கள் புரிந்ததாகவும், பல அசுரர்களை வதம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
எத்தனை கோயில்கள் தெரியுமா?
ஒன்றல்ல இரண்டல்ல, 5000 கோயில்களுடன் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்த நகரம் ஒரு பெரிய யாத்திரை நகரமாக திகழ்கிறது.
wiki
பிருந்தாவன சந்திரோதய கோயில்
உலகின் மிக உயரமான கோயில் என்ற பெருமைக்குட்பட்ட இந்த கோயில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் கட்டப்பட்டது.
இது மதுரா நகருக்கு அருகே விருந்தாவன் எனுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
wiki
எவ்வளவு செலவு தெரியுமா?
இந்த கோயிலின் மதிப்பை அறிந்தால் நீங்கள் வாயைப் பிளந்துவிடுவீர்கள். முன்னூறு கோடியாம்.
wiki
எவ்வளவு பெருசு தெரியுமா?
5 ஏக்கரில் அமைந்துள்ள இந்த கோயில் 700 அடி உயரமாகும். அதாவது 213 மீட்டர் உயர கட்டிடமாக இந்த கோயில் எழுப்பப்பட்டுள்ளது.
எவ்வளவு மாடி இருக்கும்?
நீங்கள் நினைத்ததை விட நிச்சயமாக அதிகம்தான் . எழுநூறு மாடிகள் கொண்ட கட்டிடம் இது தெரியுமா.
வருடம் முழுவதும் கொண்டாட்டம்
இந்த கோயில் வருடம் முழுவதும் நடை திறந்து கொண்டாட்டங்களில் ஈடுபடுவது போல இருக்கும்படி திட்டமிடப்பட்டுள்ளது.
wiki
நீங்கள் கட்டாயம் காணவேண்டிய இடம்
நீங்கள் கட்டாயம் காணவேண்டிய இந்து கோயிலாக இது அறியப்படுகிறது.
இங்குள்ள வசதிகள் பற்றி தெரியுமா
இங்கு நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்கமுடியாத அளவுக்கு ஒரு கோயில் என்பதைத் தாண்டி பல வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றை ஒவ்வொன்றாக காண்போம்
ஹெலிபேட்
ஹெலிகாப்டர்கள் வந்து இறங்க வசதியாக ஹெலிபேட் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
கோப்புபடம்
வாகன நிறுத்துமிடம்
வாகனங்கள் நிறுத்துவதற்கென 12 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கோப்புபடம்
கோயிலுக்குள் பூங்கா
இதுவரை எந்த கோயிலிலும் கேள்விப்படாத கோயிலுக்குள் ஒரு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியகம்
கிருஷ்ணா தொடர்புடைய பொருள்கள் சேர்த்து வைத்து அதற்கென ஒரு அருங்காட்சியகம் அமைத்துள்ளனர்.
haryana tourism offl
தொலைநோக்கி
இங்கு அமைக்கப்பட்டுள்ள தொலைநோக்கி மூலமாக மொத்த இடத்தையும் இருந்த இடத்திலிருந்து பார்த்து ரசிக்கலாம்.
தீம் பார்க்
குழந்தைகள் அதிகம் விரும்பும் தீம் பார்க் நல்ல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
Sotti
பார்வை கோபுரம்
மேலும் பார்வை கோபுரம், நிலை தூக்கி, புத்தக நிலையம், ஒலி ஒளி அமைப்புடன் நூலகம் முதலியன அமைக்கப்படவுள்ளன.
இதிலும் மிக முக்கியமாக இரவு சபாரி ரைடு கோயில் சார்பாக அழைத்துச் செல்லப்படுகிறது.
2000 வருடம் ஆகியும் மங்காத வண்ண ஓவியங்கள் எங்கே தெரியுமா?
உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
அலறியடித்து ஓட்டம்பிடிக்கும் பக்தர்கள் 6 மணிக்கு மேல் கல்லாகும் மனிதர்கள் எங்கே தெரியுமா?
ஏழுமலையானின் வியப்பூட்டும் மர்மங்கள் குறித்து தெரியுமா?(விடியோ)
திருப்பதியில் இருப்பது உண்மையில் யார் தெரியுமா?
இந்த எடத்துல அணைய போட்டா கர்நாடகா நம்மகிட்ட தண்ணிக்கு கெஞ்சும் இனி!