இந்தியாவின் வட கோடியில் இருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 22 மாவட்டங்களில், ஒரு முக்கிய மாவட்டமாக பரமுல்லா மாவட்டம் அமைந்திருக்கிறது. மொத்தம் 4190 கிமீ பரப்பளவை கொண்டிருக்கும் இந்த மாவட்டம் 8 டெசில்கள் மற்றும் 16 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஒவ்வொரு மாவட்டத்திலும் சில இடங்கள் சுற்றுலாத் தளங்களாக இருக்கும். ஆனால் பாரமுல்லாவில் மொத்த இடமும் சுற்றுலாத் தளம்தான். வாங்க ஒரு ரவுண்ட் போய்ட்டு வருவோம்.
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கட்டப்பட்ட ஒரு நகரம்
பரமுல்லா மாவட்டம் இஸ்லாமிய திருத்தலங்களுக்கும், குருத்துவாராக்களுக்கும், கோயில்களுக்கும், மடங்களுக்கும் மற்றும் புண்ணிய தலங்களுக்கும் மிகவும் பரிசித்தி பெற்ற பகுதியாக விளங்குகிறது.
Kanchu22
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கட்டப்பட்ட ஒரு நகரம்
குல்மார்க், அல்பதர் ஏரி, கிலன்மார்க், மகாராணி சிவாலயம், பெரோஸ்போர் மற்றும் நிங்கில் நல்லா, குல்மார்க் பயோஸ்பியர் நீர்த்தேக்கம், சியாரத்தில் இருக்கும் பாபா ரெஷி, மன்ஸ்பால் போன்ற பகுதிகள் பரமுல்லா மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களாக உள்ளன..
Peter
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கட்டப்பட்ட ஒரு நகரம்
மேலும் இந்த பரமுல்லா மாவட்டத்தில் இருக்கும் உலர் ஏரி, மனஸ்பல் ஏரி போன்றவற்றை சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
Shabir Dar
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கட்டப்பட்ட ஒரு நகரம்
அதோடு இந்த மாவட்டத்தில் அமைந்திருக்கும் இஸ்லாமிய புனிதத் தலங்களான, டான்க்மார்க்கில் அமைந்திருக்கும் சியாரத் பாபா ரெஷி, சோபோரில் அமைந்திருக்கும் சியாரத் டுஜார், அகமத்போராவில் அமைந்திருக்கும் இமாம்பரா கூம் மற்றும் சியாரத் ஜன்பாஸ் வாலி போன்றவற்றை பார்க்க வேண்டும்.
Vinayaraj
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கட்டப்பட்ட ஒரு நகரம்
வாட்லாப்பில் அமைந்திருக்கும் சியாரத் டஸ்டிகீர் சாகிப் மற்றும் சியாரத் பாபா ஷாக்கூர் உதின், பன்டிபோராவில் அமைந்திருக்கும் சியாரத் அகிம் ஷெரிப் போன்ற இடங்கள் மிகவும் முக்கியமான சமயத் தலங்கள் ஆகும்.
Vinayaraj
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கட்டப்பட்ட ஒரு நகரம்
இசுலாமிய புனிதத் தலங்கள் மற்றும் இந்து சமய புனிதத் தலங்கள் மட்டுமல்லாது, இந்த பரமுல்லா மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் மனங்களை மயக்கும் வகையில் ஏராளமான இயற்கை காட்சிகள் இருக்கின்றன.
Muzzyy
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கட்டப்பட்ட ஒரு நகரம்
இங்கிருக்கும் நீரோடைகள், மலைகள், பள்ளத்தாக்குகள், ஏரிகள், நீரூற்றுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்றவற்றை கண்டு ரசிக்கும் போது, பரமுல்லாவை விட்டு நீங்க மனம் இடம் கொடுக்காது.
Royroydeb