சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஐந்து நாட்களாக தன் ரசிகர்களை மாவட்டவாரியாக சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அரசியல் பிரவேசம் குறித்தும் கேள்விகள் எழுந்தன.
LATEST: ரஜினி தனது அரசியல் கட்சியை இந்த இடத்தில்தான் தொடங்கவுள்ளார் எப்ப தெரியுமா?வீடியோ
சிலர் இந்த சந்திப்பை, ரஜினிகாந்த் அவரது திரைப்படமான 2.0 வருவதையொட்டி நடத்துகிறார். இது முழுக்க முழுக்க அவரது சுயநோக்கம் என்று கேலி செய்கின்றனர். ஆனால் இது அவரது அரசியல் பிரவேசத்துக்கான முன்னோட்டம் என கருதுகின்றனர் பெரும்பான்மையான ரசிகர்கள்.
இது உண்மை என நிரூபிக்கும் வகையில் சூப்பர்ஸ்டாரும் அரசியல் குறித்தும் , அரசியல் அதிகார அமைப்பு குறித்தும் பட்டும் படாமலும் பேசினார். ஆனால் பலருக்கு தெரியாத அவருக்கு நெருக்கமானவர்கள் மட்டும் அறிந்து ஒரு விசயம் அவர் எந்த முடிவு எடுத்தாலும் இந்த இடத்துக்கு சென்றுதான் தீர்மானிப்பார் என்பது.
வாழ்க்கையையே புரட்டிப் போடும் முக்கிய முடிவை நிச்சயம் அந்த இடத்தில் தான் எடுப்பார் என்கின்றனர் அவரது ரசிகர்களில் பலர். அந்த இடம் எங்குள்ளது என்று பார்க்கலாம் வாருங்கள். வீடியோ இணைக்கப்பட்டுள்ளது
எப்படி செல்லலாம்
உங்கள் பகுதியிலிருந்து விமானத்திலோ அல்லது ரயிலிலோ தலைநகர் டெல்லி சென்றுவிடுங்கள். அங்கிருந்து இரவு நேரத்தில் கிடைக்கும் பழைய டெல்லி - காத்கோடம் ரயிலில் ஏறி பயணியுங்கள்.
காத்கோடத்திலிருந்து உங்களுக்கு ராணிகேட் செல்ல பேருந்து அல்லது கட்டண மகிழுந்து டாக்ஸி வசதிகள் உள்ளன.
போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை
நீங்கள் டெல்லியிலிருந்து ரிஷிகேஷ் வழியாக பாபா குகைக்கு செல்லவதாக இருந்தால் அதிக போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதை கணக்கில் கொள்ளுங்கள்.
நெரிசல் குறைவாக விரைவாக செல்ல டெல்லியிலிருந்து மீரட் வரை வந்து அங்கிருந்து மாற்றுபாதையில் தாருக்கேஸ்வரை அடையுங்கள். அதன்பின் சிறிதளவு நெரிசல் நேர்ந்தாலும் காலநிலைகள்(சீசன்) பொறுத்து விரைவில் சென்றுவிடலாம்
இமயமலையில் வாழ்ந்த யோகி
இந்த குகையில் பாபாவின் அவதாரமான யோகி ஒருவர் வாழ்வதாக நம்பிக்கை. அவரின் ஆசி பெறவே பக்தர்கள் காடு,மலை கடந்து சிரமப்பட்டு செல்கின்றனர்.
ஆன்மீக பயணம்
நீங்கள் இந்த பகுதியில் ஒரு சிறப்பு ஆன்மீக பயணம் மேற்கொள்ள ஆசைப்படுகிறீர்களா அப்போ உங்களுக்கு வழிகாட்டுகிறது இந்த வழிகாட்டி கட்டுரை
இந்த பகுதியில் மிகப் பிரபலமான இடம் என்றால் அது ரிஷிகேஷ் தான். அங்கிருந்து பாபா குகைக்கு எப்படி செல்வது என்பதை வழிகாட்டுகிறது இன்றைய கட்டுரை. வாருங்கள் புறப்படலாம்
புறப்படுங்கள்
ரிஷிகேஷில் நீங்கள் தங்கியிருக்கும் அறையிலிருந்து வெளியேறிவிட்டு இரவு 8 மணிக்கெல்லாம் கிளம்பிவிடுங்கள். அருகிலுள்ள ரிஷிகேஷ் பேருந்து நிலையத்துக்கு ஆட்டோ அல்லது நகரப் பேருந்தில் ஏறி செல்வோம் வாருங்கள்.
வெறும் வளையலுக்காக ஈடு கொடுக்கப்பட்ட கோட்டையை தெரியுமா?
ரிஷிகேஷ் பேருந்து நிலையம்
15 நிமிடங்களுக்குள் ரிஷிகேஷ் பேருந்து நிலையத்தை அடைந்துவிடுவோம். அங்கிருந்து நகரப்பேருந்தில் ஏறி ஹரித்வார் செல்வோம்.
ரிஷிகேஷிலிருந்து ஹரித்வார் 45 நிமிடங்களில் அடையலாம். போக்குவரத்து நெரிசலைப் பொறுத்து 10 நிமிடங்கள் அதிகம் எடுக்கலாம்.
டேனிஷ் ஆட்சியின் கீழ் இருந்த ஒரே தமிழக நகரம் எது தெரியுமா?
ஹரித்வார்
ஹரித்வார் ரயில் நிலையத்திலிருந்து காத்கோடமுக்கு அதிகாலை 12 மணிக்குதான் ரயில் இருக்கிறது என்பதால் கொஞ்சநேரம் ரயில் நிலையத்தில் காத்திருக்க நேரலாம்.
NID chick
செல்வத்தை அருளும் திருப்பதி வெங்கடாசலபதி கோயில்
7 மணி நேர பயணம்
ஏழு மணி நேர பயணத்துக்கு பிறகு காலை 7.30 மணிக்கெல்லாம் சராசரியாக காத்கோடம் வந்தடைவோம். ரயில் நிலையத்திலேயே அருமையான டீ, காபி குடித்து விட்டு உற்சாக மாக பாபாஜி குகை நோக்கி நகர்வோம்.
ஓவ்வொரு தமிழரும் பார்க்கவேண்டிய கோவில்
டாக்ஸி
அங்கிருந்து டாக்ஸி மூலம் 4 மணி நேரத் தொலைவில் உள்ள ராணிகேட்டுக்கும் அங்கிருந்து 3 மணி நேரத்தொலைவில் உள்ள துவாரகாட்டுக்கும் வந்தடையலாம். இறுதியில் பாபாஜி குகை உள்ள பகுதியை வந்தடைவோம்.
திகிலூட்டும் குகைகள்!
அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்
ஏற்கனவே நாம் வரும் வழியில் துவாரகாட், ஹரித்வார், ரிஷிகேஷ் முதலிய இடங்களை கடந்து வந்துள்ளோம். உங்களிடம் நிறைய நாட்கள் கைவசம் இருந்தால் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நாள் இருந்து பார்த்துவிட்டு வருவது சாலச் சிறந்தது.
மிஸ் பண்ணக்கூடாத அட்டகாச அருவிகள் 25!!!
ஹரித்வார்
ஹரித்வார்
Sanatansociety
திருச்செந்தூர் முருகன் கோயில் பற்றி நீங்கள் அதிகம் அறிந்திராத தகவல்கள்
ஹால்டுவானி
ஹால்டுவானி
Travelling Slacker
நிறம் மாறும் கருவறை மண் - நாகராஜ கோவில்ல என்ன நடக்குது?
கேதார்நாத்
கேதார்நாத்
anurupa_chowdhury
சுற்றுலா நேரங்களில் எப்படி செலவை குறைக்கலாம்? உங்களுக்காக மிக பயனுள்ள யோசனைகள்!
தாஜ்மஹாலின் ரகசிய அறையை இந்திய அரசு ஏன் திறக்க மறக்கிறது தெரியுமா அதிர்ச்சியூட்டும் மர்மங்கள்
விலங்குகளாக உருமாறும் அதிசய மரம் .... எங்கே இருக்கிறது தெரியுமா?
உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
இந்த குகையில் தான் விநாயகரின் மனித தலை இருக்காம்!
இந்த இடங்கள்ல மட்டும் திருமணம் செஞ்சீங்க! உங்கள அடிச்சிக்க ஆள் இல்லங்க!
இன்னமும் விடைகாண முடியாத மர்மங்கள் நடந்த அந்த 5 இடங்கள்