லேட்டஸ்ட் : திகிலடையச் செய்யும் அமானுஷ்யத்தால் ஒதுக்கப்பட்ட சுற்றுலாத்தளங்கள்!! இங்கெல்லாம் போயிடாதீங்க!!
இந்தியாவில் மன்னர் ஆட்சிகளுக்குட்பட்டு தனித்தனி நாடுகளாக இருந்தபோது இந்து மதமும், பின்னர் படிப்படியாக பல்வேறு மதங்களும் பரவியது.
அப்படி பரவிய ஒவ்வொரு மதமும் தங்கள் அடையாளத்தை இந்தியாவில் பதிக்க முயன்றன. அந்த வகையில் கிறிஸ்துவ மதத்தினர் தங்கள் வழிபடும் இடமான சர்ச் எனப்படும் தேவாலயங்களை அந்தந்த பகுதிகளில் அமைத்தனர்.
அப்படி அமைக்கப்பட்ட தேவாலயங்களில் சில உலகச் சிறப்பு வாய்ந்தவை. அப்படிபட்ட ஒரு தேவாலயத்தைப் பற்றி இங்கு காணப்போகிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய தேவாலயம் இதுதான்.
இந்த மாதம் அல்டிமேட் டாப் 5 கட்டுரைகள்: கீழே
எங்குள்ளது
தெலங்கானா மாநிலம் மேடக் பகுதியில் அமைந்துள்ளது மேடக் கதீட்ரல் எனப்படும் தேவாலயம்.
சிறப்பு
இது ஆசியாவின் மிகப்பெரிய தேவாலயம் என்னும் சிறப்பைப் பெற்றுள்ளது.
எப்படி செல்வது
ஹைதராபாத்திலிருந்து ஏறக்குறைய 100 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்துக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
எப்போது கட்டப்பட்டது
இது 1947ம் ஆண்டு கட்டப்பட்டதாக தெரிகிறது. இது ஒரு ரோமன் கத்தோலிக்க சபை ஆகும்.
Myrtleship
எவ்வளவு பெரியது
ஒரே நேரத்தில் 5000 பேர் அமர்ந்து பிரார்த்திக்கக்கூடிய அளவுக்கு பெரிய சபை இதுவாகும்.
Myrtleship
சுற்றுலா
இந்த தேவாலயத்துக்கு உலகம் முழுவதுமிருந்து பல லட்சம் மக்கள் வருகை தருகின்றனர்.
தெலங்கானா சுற்றுலாவுக்கு இந்த தேவாலயமும் ஒரு சிறப்பு ஆகும்.
Myrtleship
கட்டிட அமைப்பு
100 அடி அகலமும், 200 அடி நீளமும் கொண்ட இந்த கட்டிட அமைப்பு இங்கிலாந்து பாணியில் கட்டப்பட்டுள்ளது.. இங்கு ஒரே நேரத்தில் 5000 பேர் அமர்ந்து வழிபாடு நடத்த முடியும்.
Myrtleship
கலையமைப்பு
இங்குள்ள சுவர்கள், தரைகள் வண்ண வண்ண பளிங்குகளால் ஆனது. இங்கிலாந்து நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட பளிங்கு துண்டுகள் கலந்து வண்ணங்களில் இந்த சுவர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
Ljuboje
இயேசுவின் இயற்தன்மை
இயேசுவின் இயல்பு, வாழ்க்கை, சிலுவையில் அறைந்த நிகழ்வு என அனைத்தும் இந்த சபையில் விவரிக்கப்பட்டுள்ளது.
Dragan Zeba
மேடக்
மேடக் பகுதி சுற்றுலாவுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. அண்டை மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை பெருமளவு ஈர்க்கும் இடங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
Dragan Zeba
பாஸ்போர்ட் இல்லாமலே சீனாவுக்கு போகலாம் வாங்க
உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
அலறியடித்து ஓட்டம்பிடிக்கும் பக்தர்கள் 6 மணிக்கு மேல் கல்லாகும் மனிதர்கள் எங்கே தெரியுமா?
ஏழுமலையானின் வியப்பூட்டும் மர்மங்கள் குறித்து தெரியுமா?(விடியோ)
திருப்பதியில் இருப்பது உண்மையில் யார் தெரியுமா?
இந்த எடத்துல அணைய போட்டா கர்நாடகா நம்மகிட்ட தண்ணிக்கு கெஞ்சும் இனி!