பெஞ்ச் நேஷனல் பார்க் மத்தியப் பிரதேச மாநிலம் சியோனி மற்றும் சிக்கிந்வாராவில் மாவட்டங்களில் அமைந்துள்ளது.
இது வடக்கே முறையே சியோனி மற்றும் சிக்கிந்வாராவில் மாவட்டங்களில் கிட்டத்தட்ட சம மேற்கு மற்றும் சம கிழக்கு பகுதிகளில் இருக்கிறது.
அடர்ந்த காடாக இருந்த இந்த பகுதிகளில் அரசு பூங்காவை ஆரம்பித்தது. இந்த பூங்காவை ஒட்டு ஆறு ஒன்று பாய்கிறது. அடர்ந்த காடுகளில் இருந்து தெற்கில் அமைந்துள்ள தேசிய பூங்கா வழியாக இந்நதி பாய்கிறது. இதற்கு பெஞ்ச் ஆறு என்று பெயர்.
இது 1977 ல் வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது 1992ம் ஆண்டு பார்க் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
PC: Roving -Aye!
தற்போது இந்த இடம் இந்தியாவின் புகழ்பெற்ற புலிகள் காப்பகமாக அறியப்படுகிறது.அதன் இயற்கை வளம், செழுமையும் மிகவும் அற்புதமாக அமைந்து இருக்கிறது.
எய்ன்-ஐ-அக்பரி யில் காட்டப்பட்டுள்ள காடு இந்த பெஞ்ச் காட்டை மையப்படுத்தியது ஆகும். அதேபோல் ஜங்கிள் புக் நாவலில் காட்டப்படும் காடும் இதே காடுதான்.
PC: Soham Banerjee
கிட்டத்தட்ட 10 கிராமங்கள் இந்த காட்டினுள் உள்ளன. சரணாலயத்தின் முகப்பில் ஒரு காடும், மறுபுறம் 9 காடுகளும் அமைந்து காணப்படுகின்றன.
பெஞ்ச் தேசிய சரணாலயம் 758 சதுர கிமீ பரப்பளவை கொண்டது.
இந்த காடு மிகவும் பசுமையானதாக உள்ளது.
PC: Elroy serrao
தேக்கு, சஜா,பிஜயாசல், லெண்டியா, ஹல்டு,தோரா, சாலை,ஆன்லா,அமல்டாஸ் முதலிய வகைகள் இக்காட்டில் காணப்படுகின்றன.
வங்கப்புலி, சிறுத்தை, சாம்பல், காட்டு பன்றி, ஜாக்கல், இந்திய சிறுத்தைகள், கரடிகள், இந்திய ஓநாய், குரங்குகள், காட்டுப் பூனை, நரி மற்றும் குரைக்கும் மான் முதலிய காட்டு விலங்குகளும் வசிக்கின்றன.