சித்தர்கள் முற்றும் அறிந்தவர்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியும். பல வருடங்கள் பின்னால் நடப்பதை கூட முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள் சித்தர்கள்.
2020ல் உலகம் என்னவாகும் என்று கூட ஒரு சித்தர் எழுதியுள்ளார் என்பது நமக்கு தெரியும்.
சாகா வரம் தரும் அற்புத மூலிகைகளை கரடி சித்தர் என்பவர் தந்துள்ளார் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
இதுகுறித்த தகவல்களுக்கு முழுமையும் படியுங்கள்.
கரடி சித்தர் யார்
கரடி சித்தர் என்பவர் காலங்கிநாதர் தான். அடிக்கடி கரடி உருவெடுத்து இந்த பகுதிகளில் நடமாடி வருவார் என்கின்றனர் கஞ்சமலை பகுதியினர்.
PC: Thamizhpparithi Maari
சாட்சியான கரடி
ஊரின் அரசர் தன் மகளை அவள் காதலித்த ஏழைக்கே திருமணம் செய்து தருவதாக கூறி, அதற்கு ஒரு பந்தயத்தையும் செய்தார். புலியை வேட்டையாடி கொண்டுவருவதுதான் அது.
அதற்கு சாட்சியாக கரடியை சொன்னார் அந்த ஏழைக் காதலன். கரடி எப்படி சாட்சி சொல்லும் என்றான் மன்னன்.
PC: Thamizhpparithi Maari
அதிர்ந்த அரசவை
கரடியாக வந்த முனிவர் ஒருவர் பேசியதில் அதிர்ந்து போனது அரசவை. தான் இவருக்கு சாட்சியாக வருகிறேன். அவர் புலியை வேட்டையாடியதை நான் கண்டேன் என்றார் முனிவர்.
PC: Thamizhpparithi Maari
சித்தர் கோயில்
கஞ்சமலையின் அடிவார்த்தில் சித்தர் கோயில் ஒன்று உள்ளது.
PC: Thamizhpparithi Maari
சிவன் கோயில்
கஞ்சமலையில் ஒரு சிவன் கோயில் உள்ளது. அதன் முற்புறம் ஒரு திரிசூலம் உள்ளது. அதை வணங்கி வந்தால் நீண்ட நெடு ஆயுள் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.
PC: Thamizhpparithi Maari
சாகா வரம்தரும் மூலிகைகள்
இந்த கரடி சித்தர் சாகா வரம் தரும் மூலிகைகள் இருப்பதாகவும், பல நோய்களுக்கு நிவாரணியாக மூலிகைகளை கரடி சித்தர் கண்டறிந்திருப்பதாகவும் செவி வழி தகவல்கள் தெரிவிக்கின்றன.
PC: Thamizhpparithi Maari