குள்ளர்களின் வசிப்பிடத்தில் பல ஆண்டுகளாக பல கோடி மதிப்புள்ள புதையல்கள் புதைந்துள்ளதாக கூறப்படுகிறது. உண்மையில் இந்த புதையல் தவறாவர்களின் கைகளுக்கு சென்றுவிடக்கூடாது என்பதில் குள்ளர்கள் கருத்தாக இருந்துள்ளனர். இன்றுவரை யாரும் அந்த புதையலை கண்டெடுக்கவில்லை.
இப்படிபட்ட புதையல்கள் இருப்பதாக கூறப்படும் போதைமலையில் குள்ளர்கள் பலர் இன்றும் வாழ்ந்துவருவதாக கூறப்படுகிறது. அதன் மர்மங்களை பற்றிய பதிவு இது
எங்குள்ளது ?
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த, போதமலை பகுதியில் கீழூர், மேலூர் ஆகிய இரண்டு கிராமங்கள் உள்ளன. வடுகம் மலை அடிவாரத்தில் இருந்து, ஏழு கிலோ மீட்டர் தொலைவில் கீழுரும், அங்கிருந்து, இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் மேலூரும் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து, 700 மீட்டர் உயரத்தில், இந்த கிராமங்கள் உள்ளன.
மர்மங்களைக் கொண்ட குள்ளர்கள்
கடல்மட்டத்தில் இருந்து, 700 மீட்டர் உயரத்தில் உள்ள போதைமலை பகுதியில், பல நூற்றாண்டுக்கு முன்னர் குள்ளர்கள் வாழ்ந்ததாக தெரிகிறது. அவர்களை தங்கள் முன்னோர்களாகவும், அவர்களிடம் அதிக சக்திகள் பல இருப்பதாகவும் அப்பகுதியில் வசிக்கும் மழைவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர். அப்படி என்ன மர்மங்கள்???
கோடிக்கணக்கில் புதையல்
இந்த பகுதியில் உள்ள குள்ளர்களின் வசிப்பிடத்தில் பல ஆண்டுகளாக பல கோடி மதிப்புள்ள புதையல்கள் புதைந்துள்ளதாக கூறப்படுகிறது. உண்மையில் இந்த புதையல் தவறாவர்களின் கைகளுக்கு சென்றுவிடக்கூடாது என்பதில் குள்ளர்கள் கருத்தாக இருந்துள்ளனர். இன்றுவரை யாரும் அந்த புதையலை கண்டெடுக்கவில்லை.
அரண்மனைகளுக்கு ஆபத்து
குள்ளர்களின் அரண்மனை வீடுகள் பல சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. மிக அதிக உயரம் என்பதால் இது பெரிய அளவில் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
உங்களுக்கு புதையல் வேண்டுமா
பல சாமியார்கள் இங்கு புதையல் வேட்டைக்காக வந்து செல்கின்றனர். யாரும் இதுவரை புதையல் எடுத்ததாக தெரியவில்லை.
இப்போது எங்கே
அவர்களில் பலர் இப்போதும் காடு மலைகளில் மறைந்து வாழ்வதாகவும், வெளிஉலகில் தங்களை காட்டிக்கொள்ளமாட்டார்கள் எனவும் கூறப்படுகிறது
அறிவியல் விஞ்ஞானத்தின் முன்னோடி
சித்திரக்குள்ளர்கள் எனப்படுபவர்கள் அறிவியல் தொழில்நுட்பங்களில் முன்னோடியாக இருப்பார்கள் என்று கூறப்படுவதுண்டு. அதன் தொடர்ச்சியாக வரும் இந்த குள்ளர்களின் அறிவியல் மிகச்சிறந்தது என்று கூறுகின்றனர். பல்லாயிரம் கோடி புதையல்களை மறைத்து வைத்துள்ள அவர்களின் புத்திசாலித்தனத்தை எப்படி பாராட்டுவது என்கின்றனர் அங்கு வசிப்பவர்கள்