கட்டிடக்கலைக்கு பெயர் பெற்ற பல கோயில்கள் இந்தியாவில் உள்ளன. அதிலும் சில கோயில்கள் வரலாற்று சிறப்புமிக்கவை. காலம் கடந்தும் கம்பீரமாக நிற்கும் கோயில்களின் தனித்தன்மை அவ்வளவு எளிதாக நம்மால் புரிந்துகொள்ளமுடியாது.
அதை புரிந்துகொள்ள நீங்கள் நேரடியாக அந்த கோயிலை தரிசிக்கவேண்டும். ஆம் அப்படிபட்ட ஒரு கோயில்தான் கோல்காபூர் கோபேஸ்வரர் கோயில்.
வாங்க ஒரு சுற்றுலா போயிட்டு வரலாம்....
கோபத்தின் அடையாளம் கோபேஸ்வரர் கோயில்
சிவபெருமானும் பார்வதியும் இணைந்த கதை சொல்லும் கோயில் இது. சிவபெருமானை மணமுடிக்க பார்வதியை அவரது தந்தை அனுமதிக்கவில்லையாம்.
இதனால் அவரது தந்தையின் அனுமதி இன்றியே இவர்களது திருமணம் நடந்து முடிந்ததாம். பார்வதியின் தந்தை நடத்திய யாகத்துக்கு சிவபெருமானை அழைக்காததால் கோபம் கொண்ட பார்வதி அந்த யாகத்தீயில் விழுந்து தியாகம் செய்தார்.
இதனால் கோபம் கொண்ட சிவன், பார்வதியின் தந்தை தலையை வெட்டினார். விஷ்ணு அவருக்கு ஆட்டின் தலையை வைத்ததாகவும் நம்பிக்கை கதைகள் உள்ளன.
Shailesh.patil
அரியும் சிவனும் ஒன்னா
இந்த கோயிலில் சிவபெருமானும் , விஷ்ணுவும் சம சக்தி வாய்ந்த தெய்வங்களாக உள்ளனர்..
Abhijit Rajadhyaksha
கட்டிடக்கலை அற்புதங்கள்
இது ஒரு மிக நுண்ணிய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கோயில் ஆகும்.
Sneha Jog
கிருஷ்ணா நதிக் கரை
கிருஷ்ணா ஆற்றின் கரைகளில் உள்ள இந்த கோயில் மிகவும் சக்தி வாய்ந்தது. இங்கு வருகை தரும் பக்தர்களின் குறைகளை போக்கவல்லது என்கிறார்கள்
Shailesh.patil
தூண்கள்
இங்கு உள்ள 48 தூண்கள் உருளை வடிவமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு தூணும் அதன் நேர்த்தியான வடிவமைப்புக்காக பேசப்படும்.
Sneha jog
புத்தமதம்
இந்த கோயிலில் சிவ - விஷ்ணு தவிர்த்து புத்தமத கோட்பாடுகளும் புகழ்பெற்று விளங்கியதாக இருக்கக்கூடும் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
Abhijit Rajadhyaksha
சிதைத்த அவுரங்காசீப்
இந்த பகுதியை அவுரங்காசீப் ஆட்சி செய்தபோது இந்த கோயிலின் அழகைக் கண்டு பொறாமை கொண்ட அவுரங்காசீப் இதை அழிக்க கர்வம் கொண்டான்.
Deepak Patil
ஏற்ற காலம்
இந்த கோயிலுக்கு வருகை தர ஏற்ற காலம் ஜூன் ஜூலை மாதங்கள் ஆகும். நல்ல காலநிலையும், தகுந்த காட்சிகளும் கூடி கிடைக்கும்.
www.win7wallpapers.com
எப்படி செல்லலாம்
கோபேஸ்வரர் கோயில் கோல்ஹாபூர் அருகே அமைந்துள்ளது. கர்நாடகம் - மராட்டிய எல்லையில் அமைந்துள்ள இந்த கோயில் கொல்ஹாபூரிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ளது.