வரலாறு... அதைப் பற்றி படிக்கும்போதே நமக்குள் ஒரு வித எதிர்பார்ப்பும் வந்துவிடும். நாமும் அந்த காலக்கட்டத்தில் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணமும் பிறக்கலாம்.
இந்தியாவே திரும்பிப்பார்க்கச் செய்த 200 ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ள இடம் எது தெரியுமா?
இப்படி, சோழர்கள் காலத்தில், திப்பு சுல்தான் காலத்தில் நாம் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்பதையும் நாம் கற்பனை செய்திருக்கலாம்.
ஒருவேளை நாம் நல்ல அரசர்களைப் பற்றியே சிந்தித்து கொண்டிருக்கிறோமோ.... 60 மனைவிகளையும் ஒரே இடத்தில் கொடூரமாக கொன்ற ஈவு இரக்கமற்ற அரசன் ஒருவனை பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா?
இந்த மாதம் அதிகம் படிக்கப்பட்ட கட்டுரைகள் கீழே
வரலாற்று சான்று
கர்நாடக மாநில வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்வு கொடூர சம்பவம் நிகழ்ந்தது கிடையாதாம். அந்த அளவுக்கு கொடுமையான ஒரு நிகழ்வின் அடையாளம் தான் சாத் கபாரில் உள்ள நினைவுச் சின்னங்கள்.
1659ம் ஆண்டு தற்போதைய கர்நாடக மாநிலத்தில் உள்ள பிஜாப்பூரில் நிகழ்ந்தது இந்த கொடூரம்.
சத்ரபதி சிவாஜி
அந்த காலத்தில் சத்ரபதி சிவாஜி பெயரை கேட்டாலே மக்கள் பயந்து நடுங்குவார்களாம். அவர் படையெடுத்து வந்தால் நிச்சயம் அவருக்குத்தான் வெற்றி என்று பேசிக்கொண்டுள்ளார்கள்.
இஸ்லாமிய அரசர்கள்
இதனால் இஸ்லாமிய அரசர்களுள் சிலர் இவர்மீது பொறாமை கொண்டிருந்தனர். எனினும் அவரை வெற்றிக் கொல்ல முடியாது என்று நினைத்துக் கொண்டனர்.
அப்சல் கான்
அதிலும் ஒரு அரசன் சிவாஜியை எதிர்க்கத் துணிந்தான். யார் யாரோ சொல்லியும் கேட்காத அப்சல்கான் சிவாஜியுடன் போருக்கு தயாரானான்.
போர் யாருக்கு
போர் சிவாஜி அல்லது அப்சல் கானுக்கு எமனாக வரும் என நினைத்தால் உண்மையில் இதனால் பேராபத்துக்குள்ளானது அப்சல் கானின் மனைவிகள்தான்
அப்பாவி அரசிகள்
அப்சல் கான் கொடூர முறையில் கொலை செய்த அவனது மனைவிகள் அனைவரும் மிகவும் அப்பாவிகள். அவர்களின் சாவு நெருங்குவதைக் கண்டும் அவர்கள் கண்கலங்கவில்லை.
ஜோதிடத்தால் தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்ட மன்னன்
ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கைக் கொண்டிருந்த அப்சல்கான் அதை நம்பியே எல்லா வேலைகளையும் செய்து வந்தான்.
போருக்கு முன்
போர் காலம் நெருங்கும் முன் ஜோதிடரை அழைத்து இந்த போரில் யார் வெற்றிபெறுவார் என கேட்டான் அப்சல் கான். அதில் என்ன நடந்தது தெரியுமா?
உலகமே இருண்டது
இந்த முடிவைக் கேட்டது அப்சல் கானின் உலகமே இருண்டது. ஆம். சிவாஜியை எதிர்த்து போரிட்டால் அப்சல்கான் உயிரிழக்க நேரிடும் என ஜோதிடர் கூறியுள்ளார்.
போர் சூழல்
போர் சூழல் நெருங்க நெருங்க என்ன நடக்கப் போகிறது என்று அப்சல் கானுக்கு ஒரே பதற்றம்.
மனைவிகளை ஓரிடத்துக்கு அழைத்தான்
அப்சல் கான் தான் ஒருவேளை இறந்துவிட்டால், தன் மனைவியர்களை வேறுயாரும் திருமணம் செய்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். இதனால் அந்த கொடூர முடிவை எடுத்தான்
60 மனைவியர்
அந்த 60 பேரையும் ஓரிடத்துக்கு அழைத்தான். அங்கு சுற்றிலும் படை சூழ 60 பேரும் வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்றுகூட தெரியாது.
உறுதி செய்து கொண்டான்
60 பேரும் வந்தனரா என்பதை உறுதி செய்து கொண்டு, அவர்களை கொல்ல படையினருக்கு உத்தரவிட்டான். அதுவும் கொடூரமான முறையில்....
2 பேர் தப்பித்து சென்றனர்
60 பேரில் படையிலிருந்தும் தப்பி சென்ற இரண்டு பேரை கண்டு பிடித்து அவர்களையும் கொன்றான் அந்த கொடூரன்
மரண சோதனை
அவர்கள் இறந்துவிட்டனரா என்பதை பரிசோதித்து பின், அவர்களின் உடல்களை 60 கல்லறைகளில் புதைத்தான்.
சாத் கபார்
அந்த கல்லறைகள் இருக்கும் இடம் சாத் கபார் என்று அழைக்கப்படுகிறது. இது அப்சல்கான் மற்றும் அவனது அப்பாவி 60 மனைவியர்களின் கல்லறைகளை கொண்டுள்ளது.
சுற்றுலா பயணிகள்
இந்த சாத் கபார் ஒரு சுற்றுலா பிரதேசம் இங்குள்ள கல்லறைகளை உலகெங்கிலுமிருந்து வரும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்கின்றனர்.
சிவாஜியால் கொல்லப்பட்டான்
பின்னர் போருக்கு சென்ற அவனது படைகள் தோல்வியுற்றது. இதனால் சிவாஜியின் கையால் அப்சல்கான் கொல்லப்பட்டான். ஜோதிடர் சொன்னபடியே, நவம்பர் 10ம் தேதி கொல்லப்பட்டான் அப்சல் கான்.
அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்
கோல் கும்பா, இப்ராஹிம் வாஜா தம், அலாமட்டி அணை, ஜும்மா மசூதி, சிவகிரி கோயில், மால்கி மதினா, பாரம்பரிய அருங்காட்சியகம் ஆகியன இதனருகில் உள்ளன.
இந்தியாவில் இப்படியும் ஓர் அற்புதத்தீவு - ஆயிரம் ரூபாயில் அசத்தல் பயணம் போலாமா?
கன்னியாகுமரிக்கு மிக அருகில் இப்படி ஒரு கோவா பீச் இருக்கு தெரியுமா?
உலகமே வியக்கும் இந்த முனை கன்னியாகுமரி அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா?
குடும்ப சாபம் இப்போதே நீங்க வேண்டுமா ?. அப்ப இந்த கோவிலுக்கு போங்க
கடவுள்கள் வேற்றுக் கிரக வாசிகளா? - ஆயிரமாயிர வருட நம்பிக்கையை சுக்குநூறாக்கும் தகவல்கள்