இந்தியாவிலேயே மிகவும் பசுமையான மாநிலங்களில் ஒன்றாக திகழ்வது கேரளா ஆகும். மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் ஆறுகள் கேரளத்தில் எப்போதும் பசுமை தவழ காரணமாயிருக்கின்றன. இதன் காரணமாகவே இந்தியாவில் ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக அதிகளவிலான சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் மாநிலமாக கேரளா இருக்கிறது. கேரளத்தில் இன்னும் அதிகம் வெளியுலகத்திற்கு தெரியாத மிகவும் பசுமை இடம் தான் கவி ஆகும். தீண்டப்படாத மாசற்ற இயற்கை அழகை ரசிக்க விரும்புகிறவர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய கவியை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
கவியின் கொள்ளைகொள்ளும் அழகு
கவி, பந்தனம்திட்டா மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையான குமிளியில் இருந்து 40கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. குமிளியில் இருந்து வண்டிப்பெரியாரை வந்தடைந்து அங்கிருந்து 27.5கி.மீ தொலைவிலிருக்கும் கவியை சென்றடையலாம்.
PC: Samson Joseph
வல்லக்கடவு சோதனைச் சாவடி
கவி பெரியார் புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் அமைந்திருக்கிறது. இதனை வண்டிபெரியாரில் இருந்து கார் மூலமே வந்தடைய முடியும். இதற்கு நுழைவுக்கட்டணமாக ஒருவருக்கு ₹25யும், வாகனத்திற்கு ₹50 வசூலிக்கப்படுகிறது.
PC: Jayeshj
கவியின் கொள்ளைகொள்ளும் அழகு
லேடி ஷூ பூக்கள்
PC: Faizalcec
பெரியார் தேசிய பூங்கா, கவி
பூங்காவில் காணப்படும் ஒருவகை மலர்.
PC: K Hari Krishnan
அழகிய புல்வெளி காளான்கள்
அழகிய புல்வெளி காளான்கள்
PC: Ezhuttukari
மலபார் ராட்சதன்
மலபார் ராட்சதன்
PC: Faizalcec
நீலகிரி குரங்குகள்
நீலகிரி குரங்குகள்
PC: Faizal
இந்திய ராட்சத அணில்
இந்திய ராட்சத அணில்
PC: ArunGuy2002
இந்திய யானைகள்
இந்திய யானைகள்
PC: Arun Suresh
மாடு
புற்களை மேயும் மாடு
Pc: Arun Suresh
வண்ண வண்ண பூக்கள்
வண்ண வண்ண பூக்கள்
PC: K Hari Krishnan
என்ன செய்யலாம்
மலையேற்றம்
காட்டு சுற்றுலா
பறவைகள் காட்சி
காடுபகுதிகளில் முகாம்
காடு சாலைகளில் சுவாரசிய பயணம்
நின்னுமுள்ளிக்கு சென்று வரலாம்
படகு குழாம் செல்லலாம்
நறுமணப் பொருள்கள் தோட்டத்தில் காலார நடைபோடலாம்
மசாஜ் செய்துகொள்ளவும் வசதிகள் உள்ளன.
ஜீப் சவாரி:
கவியில் பரவிக்கிடக்கும் இயற்கை புதையலை ரசிக்க நிச்சயம் ஜீப் சவாரி செய்ய வேண்டும். ஜீப் சவாரியின் போது அரிய விலங்குகளான நீலகிரி தார் மான்கள், சிங்கவால் குரங்குகள் மற்றும் இங்கிருக்கும் 260 வகையான உயிரினங்களில் சிலவற்றை கண்டு மகிழலாம்.
PC: Reji
முன்பதிவு
விக்கு சுற்றுலா செல்லும் முன்பாக கேரள வனத்துறையை தொடர்புகொண்டு கவியில் தங்குவதற்கான காட்டேஜுகள், ஜீப் சவாரி, படகு பயணம் போன்றவற்றை முன்பதிவு செய்துகொள்வது நல்லது. இதன்மூலம் தேவையில்லாத தாமதத்தை தவிர்க்க இயலும். -
PC: Reji
கவியின் கொள்ளைகொள்ளும் அழகு
கவியின் கண்ணைக் கவரும் அழகிய மலைக்காட்சி
PC: Reji
குரங்குகள்
கவியில் அதிகம் காணப்படும் குரங்கு வகைகள்.
PC: kfdcecotourism
படகு சவாரி
கவியில் பாய்ந்தோடும் தெள்ளத்தெளிவான நன்னீர் ஓடையான கொச்சுபம்பாவில் படகு சவாரி செய்து மகிழலாம். இங்கே படகு சவாரி செய்யும் போது 'லைப் ஜாக்கெட்' அணியவேண்டியது கட்டாயமாகும். மோட்டார் படகு சவாரி மட்டுமல்லாது துடுப்பு படகில் சவாரி செய்யும் வசதியும் இங்கே உள்ளது. Show Thumbnail
கட்டணவிவரங்கள்
கவியில் ஜீப் சவாரி செய்திட ஒருவருக்கு ₹1250, சிறுவர்களுக்கு ₹675 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மதிய உணவு, இதர நுழைவுக்கட்டணங்கள் போன்ற அனைத்தும் இதனுள் அடங்கிவிடுகின்றன. கொச்சுபம்பையில் படகு சவாரி செய்ய இரண்டு நபர்களுக்கு ₹300 கட்டணம் செலுத்தவேண்டும்.
கவியின் கொள்ளைகொள்ளும் அழகு
கவியின் கொள்ளை கொள்ளும் அழகு நீர் நிலை
PC: Reji
கோபர் மரங்கள்
பைபிளில் குறிப்பிடப்படும் கோபர் மரங்கள் இந்தியாவிலேயே கவி வனப்பகுதியில் மட்டுமே இருப்பதாக தாவரவியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேரழிவில் இருந்து பூமியில் உள்ள ஜீவராசிகளை எல்லாம் கோபர் மரத்தினால் செய்யப்பட்ட படகில் ஏற்றி நோவா என்பவர் காப்பாற்றியதாக பைபிளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
PC: Muneef Hameed
மலையேற்றம்
கவியில் மலையேற்றம் செய்யலாம், உயரமான மரங்களின் மேல் அமைக்கப்பட்டுள்ள குடில்களில் தங்கலாம், மிளகு மற்றும் ஏலக்காய் தோட்டங்களுக்கு சென்று அவை உற்பத்தி செய்யப்படும் முறை பற்றி அறிந்துகொள்ளலாம், சபரிமலையை காணலாம், ஆயுர்வேத மசாஜ் செய்துகொள்ளலாம்.
PC: Reji
கவியின் கொள்ளைகொள்ளும் அழகு
கவியின் பேரழகை காணுங்கள்
PC: Reji
கவியின் கொள்ளைகொள்ளும் அழகு
PC: Reji
கவியின் கொள்ளைகொள்ளும் அழகு
PC: Reji
எப்படி செல்வது?
வார விடுமுறையில் சுற்றுலா வர அற்புதமான இடமாகும் இந்த கவி. பெங்களூருவில் இருந்து 546 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 680 கி.மீ தொலைவிலும் கவி அமைந்திருக்கிறது. அடுத்தவாரம் வரும் மூன்று நாள் உகாதி விடுமுறைக்கு சுற்றுலா போகலாம் என்ற விருப்பமிருந்தால் நிச்சயம் கவிக்கு சென்றுவாருங்கள்.
PC: Muneef Hameed