நாகாலாந்தின் டுயன்சாங் நகரம் மற்றும் ஹாக்சுங் கிராமத்திற்கு இடையில் உள்ள சாங்சாங்மோன்ங்கோ கிராமம் தான் சாங் இனத்தவர் முதன்முதலாக குடியேறியிருக்கிறார்கள்.
நாகாலாந்தின் முக்கியமான பழங்குடியினர்களான சாங் இனத்தவர் பெருமளவு வசிக்கும் இடமாக டுயன்சாங் உள்ளது. சாங்சாங்மோன்ங்கோ டுயன்சாங் மாவட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது.
புவியின் பெரிய ஓட்டையிலிருந்துதான் உயிரினங்கள் தோன்றின என்பது உள்ளூர் மக்களின் நம்பிக்கை. இந்த கிராமத்தில் உள்ள உயரமான மேடைக்கு முல்லாங் என்று பெயரிடப்பட்டுள்ளது.
சாங் இன மூதாதையர்களால் கட்டப்பட்ட இந்த முல்லாங், இம்மக்களின் வளர்ச்சி மற்றும் வளத்தின் ஆதாரமாக இருக்கும் என்பதும் உள்ளூர் நம்பிக்கையாகும். உலகத்தின் பரிணாம வளர்ச்சி காலங்களில் முல்லாங் பொதுச்சபையாக மாற்றப்பட்டுவிடும் என்று டுயன்சாங்கின் நாட்டுப்புற கதைகளில் சொல்லப்பட்டுள்ளது.
இன்றும் இந்த இடம் கிராமத்தில் எழும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் இடமாக உள்ளது. டுயன்சாங்கிலிருந்து இயக்கப்படும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் சாங்சாங்மோன்ங்கோவிற்கு எளிதில் செல்லலாம். ஒரே நாளில் இந்த கிராமத்தை பார்த்து விட்டு, இரவு டுயன்சாங் திரும்பி வந்து விட முடியும்.