துல்ஜா பவானி கோயிலின் வடகிழக்கில் அமைந்துள்ள இந்த விஷ்ணு தீர்த்தக்குளம் மூன்று வாயில்களை கொண்டுள்ளது. கல்லோல தீர்த்தக்குளத்தைப்போலவே இந்த புனிதக்குளமும் கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமித்த தீர்த்தக்குளமாக கருதப்படுகிறது.
இது படிக்கட்டுகள் மூலம் பிரதான கோயிலுடன் இணைக்கப்பட்டுள்ளது.இந்தக்குளமும் பக்தர்களின் பாவங்களை தீர்க்கும் சக்தி உடையதாக நம்பப்படுகிறது.