துல்ஜா பவானி கோயிலுக்கு வடகிழக்கு திசையில் அமைந்திருக்கும் விஷ்ணு தீர்த்தம் மூன்று நுழைவாயில்களை கொண்டது. கல்லோல தீர்த்தக்குளம் போலவே காட்சி தரும் விஷ்ணு தீர்த்தத்துக்கு கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி மூவரும் ஒன்றாக சேர்ந்து வருவதாக நம்பப்படுகிறது.
இந்தக் கோயில் துல்ஜா பவானி கோயிலுடன் கற்படிக்கட்டுகள் மூலம் இணைக்கப்பட்டிருக்கின்றது. இங்கு வந்து நீராடினால் பாவங்கள் தீரும் என்று ஒரு நம்பிக்கை உள்ளதால் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் விஷ்ணு தீர்த்தத்துக்கு கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.