திரிபுர சுந்தரி கோவில், திரிபுரா மாநிலத்தில் உள்ள மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றாகும். திரிபுர சுந்தரி கோவில் என்பது இந்து மத புராணங்கள் குறிப்பிடும் காளி தேவியின் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இங்கு அன்னை சக்தி ஸொரொஸ்ஹி வடிவத்தில் காணப்படுகிறாள். இந்தக் கோவிலின் அமைப்பு ஒரு ஆமை அல்லது கூர்மா வடிவத்தை ஒத்திருப்பதால் இது 'கூர்ம அவதாரப் பீடம்' என்று அழைக்கப்படுகிறது.
அன்னையின் வலது கால் இங்கு விழுந்ததாக நம்பப்படுகிறது. இந்து மத இதிகாசங்களின் படி, அன்னை சதியின் மரணத்தால் கலக்கமுற்ற சிவன் உயிறற்ற அன்னையின் உடலை தன்னுடைய தோளின் மேல் சார்த்திக் கொண்டு சிவ தாண்டவம் புரிந்தார்.
அவருடைய மூர்க்கமான நடனத்தை கண்டு பிற தேவர்களும் அஞ்சி நடுங்கினர். அப்பொழுது சிவனை அமைதிப்படுத்த மகா விஷ்ணு அன்னை சகியின் உடலை பல துண்டுகளாகச் சிதறடித்தார். அவ்வாறு சிதறடிக்கப்பட்ட அன்னையின் உடல் பாகங்கள் இந்தியா, பாகிஸ்தான், நேபாள், மற்றும் பர்மாவில் விழுந்ததாக நம்பப்படுகிறது.
அன்னையின் வலது கால் விழுந்த இடம் பித்ஹஸ்தன் என வணக்கப்படுகிறது. இந்தக் கோவில் அதன் குடிசை வடிவ கட்டமைப்பு மற்றும் அதன் கூம்பு வடிவ கூரையுடன் வங்காள கட்டிடக்கலையை ஒத்திருக்கிறது. திரிபுரா சுந்தரி கோவிலின் கிழக்கு பக்கத்தில் கல்யாண் சாகர் என்கிற ஏரி அமைந்துள்ளது.