ஒரு பேரிக்காய் வடிவில் காணப்படும் ஃபதேஹ் சாஹர் எனும் இந்த ஏரி 1678ம் ஆண்டில் மஹாராணா ஃபதேஹ் சிங் அவர்களால் உருவாக்கப்பட்டதாகும். உதய்பூரிலுள்ள நான்கு ஏரிகளில் ஒன்றான இது அந்நகரத்தின் பெருமைகளில் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது.
இதன் ரம்மியமான நீல நிற நீர்த்தேக்கம் மற்றும் பசுமையான சுற்றுப்புறம் இவற்றின் காரணமாக இது இரண்டாவது காஷ்மீர் என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த ஏரிக்குள்ளேயே மூன்று தீவுத்திட்டுகளும் அமைந்துள்ளன.ராணி விக்டோரியாவின் மகனாகிய கன்னாட் பிரதேச பிரபு இந்த ஏரி நிர்மாணத்திற்கான அடிக்கல்லை நாட்டியுள்ளார். இந்த ஏரி ஒரு கால்வாயின் மூலம் பிச்சோலா ஏரி மற்றும் ரங் சாஹர் ஏரியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஃபதேஹ் சாஹர் ஏரிக்கரையில் ராம் பிரதாப் அரண்மனை அமைந்துள்ளது. சுற்றுலாப்பயணிகள் இந்த ஏரிக்கு பேருந்துகள், டாக்சிகள், ஆட்டோ மற்றும் தோங்கா மூலம் சென்றடையலாம்.