உதய்பூரிலுள்ள ‘உதய்பூர் வானியல் ஆராய்ச்சிக்கூடம் மற்றும் தொலை நோக்கி மையம்’ டாக்டர் அர்விந்த் பட்நாகரால் 1976ம் ஆண்டு துவங்கப்பட்டது. இது ஃபதேஹ் சாஹர் ஏரியில் உள்ள ஒரு சிறு தீவில் அமைந்துள்ளது. தெற்கு கலிபோர்னியாவிலுள்ள ‘பிக் பேர் ஏரி’ வானாய்வு மையத்தை ஒட்டி இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளித்துறையின் சார்பில் அஹமதாபாதிலுள்ள பௌதீக ஆராய்ச்சிக்கூடம் இந்த வானியல் மையத்தை இயக்கிவருகிறது. ஆஸ்திரேலியா மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கிடையே விழும் தீர்க்கரேகை இடைவெளியை இந்த வானோக்கு மையம் பூர்த்தி செய்கிறது.
அதிநவீன தொலைநோக்கு சாதனங்கள் இந்த மையத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. சூரிய நிறமாலை அடுக்குகள், அலைவரிசை ஆய்வுகள் மற்றும் காந்தப்புலம் பற்றிய ஆராய்ச்சிகளுக்கு இவை பயன்படுத்தப்படுகின்றன.
இந்த கருவிகள் மூலம் சூரிய நெருப்புச்சிதறல், சக்தி உமிழ்வுகள் மற்றும் சூரியப்புலம் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.