உடுப்பிக்கு அருகில் அமைந்துள்ள இன்னொரு முக்கியமான கோயில் இந்த அனந்தேஸ்வர் கோயில் ஆகும். இது கேரள மாநிலப்பகுதியில் அமைந்திருந்த போதிலும் கர்நாடக பக்தர்கள் மத்தியிலும் இது புகழ் பெற்றுள்ளது.
பரவலாக இது மஞ்சுளா கோயில் என்று அழைக்கப்படுகிறது. இதுவும் தென்னிந்தியாவின் மிகப்பழமையான கோயில்களில் ஒன்றாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையை இது பெற்றுள்ளது. இந்த கோயில் மூன்று புறம் மலைகளாலும் ஒரு புறம் மஞ்சேஷ்வர் நதியாலும் சூழப்பட்டுள்ளது.
இந்த கோயிலின் உள்ளே ஷீ அனந்தா, ஷீ ஈஷ்வர் மற்றும் பத்ர நரசிம்மர் (விஷ்ணு அவதாரக்கடவுள்) போன்ற மூன்று முக்கியமான விக்கிரகங்கள் காணப்படுகின்றன. 12ம் நூற்றாண்டிலிருந்து விஷ்ணுவை வழிபடும் பக்தர்களுக்கு இது முக்கிய யாத்ரீக ஸ்தலமாக விளங்கி வருகிறது.
இந்தக் கோயில் உடுப்பிக்கு அருகில் அமைந்துள்ளது. மேலும் மஞ்சேஷ்வர் ரயில் நிலையத்திலிருந்து 1.5 கி.மீ தூரத்தில் உள்ளது. உடுப்பி மற்றும் மஞ்சேஷ்வர் பேருந்து நிலையத்திலிருந்து கோயிலுக்கு பஸ் வசதிகள் உள்ளன. மஞ்சேஷ்வர் மற்றும் உடுப்பி இரண்டு ஊர்களிலும் தங்குவதற்கான வசதிகள் உள்ளன.