அனேகுட்டே என்பதற்கு யானை மலை என்று பொருள். இது முக்கிய இந்துக்கடவுளான விநாயகருக்குரிய நிலமாக கருதப்படுகிறது. பரசுராம ச்ருஷ்டியின்படி ஏழு முக்கிய புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படுவதால் இது முக்கிய ஆன்மீக யாத்ரீக ஸ்தலமாக கருதப்படுகிறது. பரசுராமரால் உருவாக்கப்பட்ட கோயிலாகவே இது கருதப்படுகிறது.
வெள்ளியால் உருவாக்கப்பட்ட விநாயகக்கடவுள் இங்கு பிரமாண்டமாக காட்சி அளிக்கின்றார். இந்த விக்கிரகம் பற்றிய ஒரு முக்கியமான அம்சம் இது நின்ற கோலத்தில் காட்சியளிப்பதாகும். பக்தர்கள் தங்கள் எடைக்கு எடை நேர்த்திப்பொருட்களை காணிக்கை அளிப்பதற்கான துலாபாரம் இந்த கோயிலில் உள்ளது. கோயிலைச் சுற்றிலும் பார்கவ புராணத்தின் சம்பவங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
இந்தக்கோயில் அமைந்துள்ள இடமான கும்பாஷி குண்டபூரிலிருந்து 9 கி.மீ தூரத்திலும், மங்களூரிலிருந்து 84 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. மேலும் இந்த இடம் தேசிய நெடுஞ்சாலை எண்: 17ன் வழித்தடத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மங்களூர், உடுப்பி மற்றும் குண்டப்பூரிலிருந்து அடிக்கடி பஸ் வசதிகள் உள்ளன. அருகிலுள்ள விமான நிலையமாக மங்களூர் விமான நிலையம் உள்ளது.