உடுப்பியிலுள்ள பழமையான கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இதன் புராதனமான தோற்றத்தின் காரணமாக இது உடுப்பியின் ஆஜ்யா என்று அழைக்கப்படுகிறது. பரவலான ஐதீகத்தின்படி பக்தர்கள் கிருஷ்ணர் கோயிலுக்கு செல்வதற்கு இங்கு வந்து வழிப்பட்டு செல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது.
சாளுக்கிய கட்டிடக்கலைக்கு நல்ல ஆதாரமாக இந்த கோயில் விளங்குகிறது. இது 6 அல்லது 7ம் நூற்றாண்டில் கட்டப் பட்டிருக்கலாம் என்று வரலாறு கூறுகிறது. அனந்தீஸ்வரர் கோயில் கட்டப்பட்ட அதே காலகட்டத்தில் இதுவும் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த கோயிலுக்கு பின் ஒரு சுவாரசியமான புராணக்கதையும் சொல்லப்படுகிறது. ஒரு முறை சந்திரக்கடவுள் தக்ஷ பிரஜாபதியால் சபிக்கப் பட்டதாகவும் அதனால் சந்திரக்கடவுள் இங்கு சிவனை நினைத்து தவம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
சிவனாகிய ஈஸ்வரனை துதித்து சந்திரக்கடவுள் தவம் செய்த இடம் என்பதால் இந்த கோயிலுக்கு சந்திரமௌளீஸ்வரர் கோயில் என்ற பெயர் வந்துள்ளது.
இந்த கோயில் மணிப்பால் நகரத்திலிருந்து 3 கி.மீ தொலைவிலும் மால்பே நகரத்திலிருந்து 6 கி.மீ தொலைவிலும், மங்களூரிலிருந்து 60 கி.மீ தொலைவிலும், குண்டப்பூரிலிருந்து 30 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் மற்றும் விமான நிலையம் மங்களூரில் அமைந்துள்ளது.