உடுப்பி மாவட்டத்தில் குண்டப்பூர் அருகே உள்ளது இந்த கோட்டேஷ்வர் என்னும் கிராமம். குண்டப்பூரிலிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கிராமத்தில் கோட்டிநாதர் அல்லது கோட்டிலிங்கேஷ்வர் கோயில் உள்ளது.
இது தவிர கோட்டேஷ்வர் கிராமத்தில் சுப்ரமணியர், கணபதி, கோபாலகிருஷ்ணர், ஜியேஸ்தன லக்ஷ்மி போன்ற தெய்வங்களுக்கும் சிறு கோயில்கள் உள்ளன.
கோட்டேஷ்வர் கோயிலுக்கருகில் ஒரு பெரிய ஏரியும் உள்ளது. இந்த ஏரியைப்பற்றி ஏழு ஐதீகக் கதைகள் சொல்லப்படுகின்றன. இந்த ஏரிக்கடியில் உள்ள சுரங்கப்பாதைகள் இங்கிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள வண்டரு கம்பல கட்டே என்னும் இடத்தை இணைப்பதாக நம்பப்படுகிறது.
இந்த இடத்துக்கு அருகிலேயே பட்டாபிராமச்சந்திர கோயில் மற்றும் கோதண்டராமர் கோயில் போன்றவையும் அமைந்துள்ளன. ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கர்நாடகத்திலிருந்து மட்டுமன்றி அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் இங்கு வருகை தருகின்றனர்.
இந்த இடம் நல்ல சாலைகள் மூலம் குண்டப்பூருடன் இணைக்கப்பட்டுள்ளது. குண்டப்பூரிலுருந்து அதிகமான பஸ் வசதிகள் கோட்டேஸ்வராவுக்கு உள்ளன. அருகிலுள்ள விமான நிலையமாக மங்களூர் விமான நிலையம் அமைந்துள்ளது. தங்குவதற்கான வசதிகள் மங்களூரில் நிறைந்துள்ளன.