கர்நாடக மாநிலத்தில் உடுப்பியிலிருந்து 6 அல்லது 7 மைல் தொலைவில் அமைந்துள்ள மலைப்பகுதி இந்த குஞ்சருகிரி மலைப்பகுதியாகும். கடவுள் அவதாரமான பரசுராமரால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் துர்கா தேவி கோயில் இங்குள்ளது.
இந்த கோயில் அமைந்துள்ள மலை ஒரு யானையின் முகத்தைப்போன்று காணப்படுவதால் இது குஞ்சரகிரி என்று அழைக்கப்படுகிறது. குஞ்சர என்றால் கன்னடத்தில் யானை என்பது பொருளாகும்.தெய்வீக மணம் கமழும் பரசுராமர் கோயிலும் துர்காதேவியின் சிலையும் பக்தர்களுக்கு ஆன்மீக நிம்மதியையும் மன நிறைவையும் பக்தியையும் அளிக்கின்றன.
புனித தீர்த்தங்கள் பாஜக க்ஷேத்திரங்கள் போன்ற தெய்வீக அம்சங்கள் இந்த ஸ்தலத்தை ஒரு முக்கியமான புண்ணிய யாத்ரீக ஸ்தலமாக பிரசித்தி பெற வைத்துள்ளன.
உடுப்பியிலிருந்து குஞ்சருகிரி கோயிலுக்கு செல்வதற்கு ஒரு மணி நேரமே ஆகிறது. உடுப்பிக்கும் குஞ்சருகிரிக்கும் இடையே அதிக பஸ்களும் இயக்கப்படுகின்றன. டாக்ஸி மற்று ஆட்டோ போன்றவையும் வாடகைக்கு கிடைக்கின்றன.
இந்த கோயிலுக்கு செல்ல விரும்பும் பக்தர்கள் உடுப்பியில் தங்கி அங்கிருந்து பயணத்தை மேற்கொள்ளலாம். உடுப்பியில் பல ரகங்களில் விடுதிகள் உள்ளன.