துவைத தத்துவ ஞானியான குரு மத்வாச்சாரியார் பிறந்த இடமாக இந்த பாஜக கருதப்படுகிறது. மத்வாச்சாரியாரின் பூர்வீக வீடு இந்த ஸ்தலத்தின் முக்கிய அடையாள சின்னமாக பிரசித்தி பெற்றுள்ளது.
மாதவ மந்திரா என்று அறியப்படும் மத சடங்குகள் நடைபெறும் இடமும் இங்கு முக்கியமான யாத்ரீக அம்சமாக விளங்குகிறது. இங்கு வேத பாடங்களும் சம்ஸ்கிருத வகுப்புகளும் நட த்தப்படுகின்றன.
இது தவிர இந்த ஸ்தலத்தில் ஒரு பரசுராமர் கோயிலும் உள்ளது.இங்குள்ள ஒரு வளாகத்தில் ஸ்ரீ அனந்தபத்மநாபர் கோயில், ஸ்ரீ மத்வாச்சாரியார் வாழ்ந்த வீடு மற்றும் அவரது சிலை காணப்படும் ஒரு கோயில் போன்றவை காணப்படுகின்றன.
இந்த சிலை ஸ்ரீ வாடிராஜாவால் அமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இங்குள்ள எல்லா அம்சங்களுமே ஷீ மத்வாச்சாரியார் சம்பந்தப்பட்டதாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக இங்குள்ள ஒரு பெரிய ஆலமரம் அவரால் நடப்பட்டதாகவும் மற்றும் இங்கு காணப்படும் நான்கு குளங்களில் அவர் நீர் எடுத்து பயன்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
பாஜக க்ஷேத்திரம் உடுப்பியிலிருந்து தென்கிழக்கில் 13 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இதற்கு அருகிலுள்ள விமான நிலையம் மங்களூர் மற்றும் அருகிலுள்ள ரயில் நிலையம் உடுப்பி ஆகும். உடுப்பியிலிருந்து பாஜக க்ஷேத்திரத்துக்கு ஏராளமான பேருந்துகள் உள்ளன. உடுப்பியிலுள்ள ஏராளமான விடுதிகள், உணவகங்களில் சுற்றுலாப்பயணிகள் தங்கலாம்.