உத்வாடா நகரம் சோரோஸ்ட்ரியன் அடஷ் பெஹ்ரம்மால் புகழ் பெற்று விளங்குகிறது. பெஹ்ரம் எனப்படுவது சோரோஸ்ட்ரியன்கள் வழிப்படும் இடமாக விளங்குவதால் உலகப் புகழ் அடைந்துள்ளது.
நாட்டிலுள்ள புனிதமான சோரோஸ்ட்ரியன் ஜோதி கோவில்களில் இதுவும் ஒன்று. மேலும் அணையாமல் எரியும் ஜோதியை கொண்டுள்ள கோவில்களில் பழமையான கோவில் இது. உத்வாடாவில் உள்ள பெஹ்ரம் உலகில் உள்ள ஒன்பது அடஷ் பெஹ்ரம்மில் ஒன்றாகும்.
எட்டு அடஷ் பெஹ்ரம் இந்தியாவில் உள்ளது. மீதம் இருக்கும் ஒன்று சென்ட்ரல் ஈரானில் உள்ளது. உத்வாடாவில் உள்ள இந்த ஜோதி கோவில் 1742-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சோரோஸ்ட்ரியன் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் புனிதமாக மதிக்கும் கோவில் இது.