உஜ்ஜைன் நகரில் உள்ள புகழ் பெற்ற இடங்களில் ஒன்று கோபால் மந்திர். இது கிருஷ்ணருக்காக கட்டப்பட்ட கோவிலாகும். இந்த கோவிலை துவாரிகதிஷ் கோவில் என்றும் அழைப்பர்.
19-ஆம் நூற்றாண்டில் பாயாஜிபாய் ஷிண்டே என்பவர் இந்தக் கோயிலை கட்டினார். பாயஜிபாய் ராணி, தௌலட் ராவ் ஷிண்டே மகாராஜாவின் மனைவி ஆவார். இந்த கோவில் மராத்தா கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இங்குள்ள சாமி விக்ரஹம் இரண்டடி உயரத்தில் வெள்ளியால் ஆனது. இந்த சிலை சலவைக்கற்களாலான பீடத்தின் மேல் அமைந்துள்ளது. இங்குள்ள கதவுகளும் வெள்ளியால் செய்யப்பட்டது.
இந்த வெள்ளி கதவுகள் சோம்நாத் கோவிலில் இருந்து மஹ்முத் கசியால் திருடப்பட்டது என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது ஆப்கான் நாட்டிலிருந்து வந்த மஹ்முத் ஷா அப்தாலியால் லாகூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
நீண்ட போராட்டத்திற்கு பின், இந்த கதவுகளை மீட்டு கோபால் மந்திரில் வைத்தனர். இங்கு வருடம் முழுவதும் பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அவைகளில் முக்கியமானது ஜன்மாஷ்டமி.