சண்டல்வாலா கட்டிடம் 1925-ஆம் கட்டப்பட்டது. இதை கட்டியவர் பிடா ஹுசைன் அப்துல் ஹுசைன் சண்டல்வாலா. இந்தக் காலத்தில் பார்க்க முடியாத பண்டைய கால கட்டிடக்கலையை இந்த கட்டிடத்தில் பார்க்க முடியும்.
உஜ்ஜைன் மற்றும் ஜெய்ப்பூரில் இருந்து வந்த கைத்திறத் தொழிலாளர்களின் கடின உழைப்பால் இந்த கட்டிடம் கட்டப்பட்டது. உஜ்ஜைன் நகரத்திலேயே சிறந்த கட்டிடக்கலையோடு விளங்கும் கட்டிடம் இது.
உஜ்ஜைன்னில் உள்ள R.P. பார்கவ் மார்க்கை காண விரும்புபவர்கள், இந்த கட்டிடத்தையும் காண நேரிடலாம். இந்த கட்டிடம் இப்போது மாநகராட்சி மன்றம் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் மாநில அரசாங்கத்தாலும் பராமரிக்கப்படுகிறது.
இந்த கட்டிடத்தின் உள்வேலைகளை பார்க்கும் போது ஒரு அரண்மனையை போலவே காட்சி தரும். பிடா ஹுசைன் சண்டல்வாலாவின் வாரிசுகள் இந்த கட்டிடத்தில் தான் இப்போது வாழ்கின்றனர்.