சித்தாவட் என்ற இடம் புனித நகரமான உஜ்ஜைன்னில் உள்ளது. இதனருகில் தான் ஷிப்ரா நதி ஓடுகிறது. தெய்வீக பண்பு கொண்ட இடமாக திகழ்கிறது இந்த இடம். சித்தாவட்டில் இருக்கும் ஷிப்ரா நதியில் பல ஆமைகளை காணலாம்.
ஈமச் சடங்குகளுக்கு பின் நடக்கும் சடங்குகளுக்கு புகழ் பெற்றது சித்தாவட் காட். இந்த சடங்குகளை புரிய மத்தியப் பிரதேசத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு வந்த வண்ணம் இருப்பர்.
புராணங்களில் இந்த இடத்தை பிரேத-ஷில்லா-தீர்த்தா என்று அழைத்தனர். பார்வதி தேவி இந்த இடத்தில் தவம் புரிந்ததாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். இந்த இடத்தில் இருந்த பெரிய ஆலமரம் ஒன்றை வெட்டி, அந்த இடம் இரும்புத்தாள்களால் மூடப்பட்டது என்று ஒரு பழங்கதை உள்ளது.
ஆனால் அதிசயமாக அந்த இரும்புத் தாள்களை பெயர்த்து அந்த ஆலமரம் மீண்டும் வளரத் தொடங்கியதாம். அன்று முதல் இந்த இடம் புனிதமான இடமாக உள்ளூர்வாசிகளால் கருதப்படுகிறது. நாத் செச்ட்டை பின்பற்றுபவர்களும் இங்கே தங்கள் வழிபாட்டை நடத்துகிறார்கள்