வேத சாலை என்பது உஜ்ஜைன்னில் உள்ள புகழ் பெற்ற வான் ஆய்வுக்கூடமாகும். இது 1719-ஆம் ஆண்டு ஜெய்ப்பூரை சேர்ந்த சவாய் ராஜ் ஜெய்சிங் மகாராஜாவால் கட்டப்பட்டதாகும்.
உஜ்ஜைன் பண்டைய காலத்தில் வானாய்வுகள் நடத்தும் மையமாக விளங்கியது உண்மை தான். வட இந்தியாவில் உள்ள நாட்குறிப்பை பஞ்சாங்கம் என்று கூறுவர். இது உஜ்ஜைன்னில் நடத்தும் கணக்கை வைத்தே உருவாக்கப்படுகிறது.
உஜ்ஜைன்னின் தென் கிழக்கு பகுதியில் இந்த ஆய்வுக்கூடம் இருக்கிறது. இந்த ஆய்வகத்தில் நான்கு நினைவுச் சின்னங்கள் உள்ளன. இங்கே ஒரு கோளரங்கம் மற்றும் ஒரு தொலைநோக்கி கருவியும் உள்ளது.
இங்குள்ள மூன்றாவது நினைவுச் சின்னத்தை டிக்னாஷா யான்த்ரா என்று அழைப்பர். இதனை வைத்து நட்சத்திரங்கள் மற்றும் கோள்கள் இருக்கும் இடத்தை கணிக்கலாம்.
இங்குள்ள ஞாயிற்றுத் தட்டும் புகழ் பெற்றது. இந்த கருவியை வைத்து எந்த ஒரு விண்ணக பொருளும் விண்ணக நிலநடுக்கோட்டுக்கு கீழ் இறங்கினால் கண்டுப்பிடித்து விடலாம்.