உக்ருளில் உள்ள, ஏராளமான திறந்த வெளிகள் சுற்றுலா பயணிகளின் கவனத்தை கவர்ந்தாலும், இங்குள்ள பூங்காக்கள் பல்வேறு வழிகளில் அவர்களை மகிழ்விக்கின்றது.
உக்ருள் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள எல் ஷாடாய் பூங்கா அவற்றுள் மிக முக்கியமானது. இது உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ளது.
நகரத்தின் மத்தியில் உள்ள காரணத்தால், இப்பூங்காவில் எப்பொழுதும் மக்கள் கூட்டம் நிரம்பியிருக்கும். இங்குள்ள பெரியவர்கள் பூங்காவை சுற்றி நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொழுது, குழந்தைகள் திறந்த மைதானத்தில் விளையாடி மகிழ்வதை காணலாம்.
இந்த பூங்கா நகரத்தின் பிற பகுதிகளுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளதால் பூங்காவை அடைவதற்கு எராளமான பேருந்துகள், தனியார் வண்டிகள், மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் எளிதில் கிடைக்கின்றன.
பூங்காவிலுள்ள அழகான பூக்கள் தனது நிறங்களை வானில் தூவி இந்த பூங்காவை வண்ணமயமாகச் செய்கின்றன. பூத்து குலுங்கும் மரங்களின் நிழல்களில் நடந்து செல்வது நமது சோர்வடைந்த உடலுக்கும், மனத்திற்கும் இதம் தரும் ஒரு இனிய நிகழ்வாகும்.
எல் ஷாடாய் பூங்கா, சுற்றுலா பயணிகள் தங்களுடைய ஒரு நாளை அனுபவித்து செலவழிக்கத் தக்க வகையில் அமைந்த ஒரு சிறந்த இடம் ஆகும்.