நில்லை தேயிலை தோட்டம் , உக்ருள் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகராகிய டொல்லொய் என்ற இடத்தில் உள்ளது. இந்த தேயிலை தோட்டத்தின் கிரீன் டீ மிகவும் பிரபலமானது. இந்த இடத்தை சுற்றியுள்ள பசுமையானது பயணிகளை பெரிதும் ஈர்த்து வருவதால், இந்த இடம் மிக வேகமாக சுற்றுலாத் தலமாக வளர்ந்து வருகிறது.
இங்கே வளரும் தேயிலை, கைகளால் பறிக்கப்பட்டு சூரிய வெளிச்சத்தில் உலர்த்தப்படுவதால், இதன் மருத்துவ குணங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த இயற்கை முறையானது உள்ளூர் மக்களால் மிகவும் விரும்பப்படுவதால், இந்த தோட்டத்து தேயிலையின் தேவை சந்தையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இங்கே வளர்க்கப்படும் தேயிலைக்கு ஒரு தனிப்பட்ட அம்சம் ஒன்று உள்ளது. இந்த தேயிலையை இரண்டாம் முறை கொதிக்க வைக்கும் பொழுது மட்டுமே இதன் உண்மையான சுவை வெளிப்படும். இந்த இடத்தின் பசுமை நம் கண்களுக்கு விருந்தாகும். இது உக்ருளிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.