கடல் மட்டத்திலிருந்து 940மீ உயரத்தில் அமைந்திருக்கும் சிந்துபூரணி கோவில் உணாவின் முக்கியமான மத தலங்களில் ஒன்றாகும். இந்து கடவுளான சக்தியை வணங்குவதற்கான சக்தி பீடங்களில் ஒன்றாக இந்த கோவில் விளங்குகிறது. இந்து கடவுளான சிந்துபூரணிக்காக கட்டப்பட்டுள்ள இந்த கோவில் பார்வெயினில் இருந்து 3கிமீ தொலைவில் உள்ளது.
இந்த கோவிலை கட்டியவர் சரஸ்வத் பிராமணரான பண்டித மாய் தாஸ் ஆவார். இந்த கோவிலில் பக்தர்களை முதன்மையாக ஈர்க்கும் இடமாக இந்து கோவில்களின் கடவுள்கள் அமர்ந்திருக்கும் கர்ப்பக்கிரகம் உள்ளது. வடக்குப் பகுதியைப் பார்த்தவாறு இருக்கும் இந்த கோவிலின் நுழைவாயிலில் பிற இந்துக் கடவுள்களான கணேஷ் மற்றும் ஹனுமானின் சிலைகள் உள்ளன.
கற்சிலையாக இருக்கும் இந்த கடவுள், பிண்டி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். இந்த தெய்வம் வெள்ளை மார்பிள் கற்களால் செய்யப்பட்ட பல்லக்கில் வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த கோவிலின் மேற்குப் பகுதியை இந்து கடவுள்களான பைரோன் மற்றும் ஹனுமான் ஆகியோருடைய படங்கள் அலங்கரிக்கின்றன. இந்த கோவில் வளாகத்தில் காணப்படும் ஆலமரத்தினடியில் 'முண்டானா' என்றழைக்கப்படும் குழந்தைகளுக்கான முதல் முடி காணிக்கை நிகழ்ச்சியான நடக்கும்.
'மாதா டா மாதா' என்ற பெயரிலும் அழைக்கப்படும் சிந்துபூரணி கண்காட்சியானது வருடத்திற்கு மூன்று முறைகள் சிந்துபூரணி கிராமத்தில் நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சி இந்து மத மாதங்களான சேட் (மார்ச்-ஏப்ரல்), சவான் (ஜீலை-ஆகஸ்ட்) மற்றும் ஆசன்ச் (செப்டம்மபர் - அக்டோபர்) ஆகிய மூன்று மாதங்களில், இந்து பெண் கடவுளான பகவதி சின்மஸ்தகாவின் கோவிலுக்கு அருகில் இந்த கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
மக்களின் நம்பிக்கையின் படி இந்த கடவுள் பழைய காலங்களில் நிழலாக காட்சி தருவார். இந்து பண்டிகைகளான நவராத்திரியின் போது ஒன்பது நாட்களும், சவான் மாதத்தில் பத்து நாட்களுக்கும் இந்த கண்காட்சி நடக்கும்.