டேரா பாபா ருத்ரு, உணா மாவட்டத்திலுள்ள நரி என்ற கிராமத்தில் உள்ள முதன்மையான சுற்றுலா தலமாகும். உணாவில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள இந்த கோவில், இந்து கடவுளான சிவ பெருமானின் அவதாரமாக கருதப்படும் பாபா ருத்ரானந்தாவை வழிபடுவதற்காக எழுப்பப்பட்ட இடமாகும்.
இந்த துறவி கோவிலை கட்டியதோடு மட்டுமல்லாமல், 'அக்ஹண்ட் தூணா' என்றழைக்கப்ப்ட புனித சாம்பலைதரும் நெருப்பையும் 1850-ஆம் ஆண்டில் உருவாக்கியதாக சொல்லப்படுகிறது.
பொது மக்களின் நம்பிக்கைப்படி, 'அக்ஹண்ட் தூணா' சாம்பல் பாம்புக்கடிக்கு மாற்று மருந்தாக பயன்படும் குணம் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. 1970-ம் ஆண்டில், இப்போது குருவாக இருப்பவரான மஹன்ட் சுக்ரீவானந்தர், பாபா ருத்ரு பால் கோபால் கோவிலை டெல்லியில் கட்டினார்.
பஞ்ச பீஷ்ம மேளா, நிர்ஜாலா ஏகாதாசி கண்காட்சி, பாபா ருத்ரு ஜெயந்தி மற்றும் குரு பூர்ணிமா ஆகிய விழாக்களும், கண்காட்சிகளும் இங்கே மிகுந்த ஆர்வம் மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகின்றன.
இது மட்டுமல்லாமல், 'குஷோட்பாட்டினி அமாவசை' என்றழைக்கப்படும் பெரிய கண்காட்சியும் இந்து பண்டிகையான சங்கராந்தியின் போது நடத்தப்படுகிறது.