உணாவில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் அமைந்துள்ள தேரா பாபா பார்பாக் சிங் குருத்துவாராவானது மஞ்சி சாஹிப் குருத்துவாரா என்றும் உள்ளூரில் அழைக்கப்படுகிறது.
மலையின் உச்சியில், யூகலிப்டஸ் மரங்கள் சூழ அமைந்துள்ள இந்த குருத்துவாரா பார்ப்பவரை மெஸ்மரிசம் செய்யும் வல்லமை பெற்றது. புகழ் பெற்ற துறவியான பாபா பார்பாக் சிங், இந்த பகுதியில் மிகவும் அறியப்பட்ட சமூக சீர்த்திருத்தவாதியும் மற்றும் மதத்தலைவருமான பாபா ராம் சிங்கின் மகன் பாபா குர் பார்பாக் சிங்கிற்காக இந்த கோவிலை கட்டினார்.
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பாபா பார்பாக் சிங் மேளா அல்லது ஹோலா மொஹல்லா என்றழைக்கப்படும் திருவிழா இந்த இடத்தில் நடத்தப்படும். பாபா பார்பாக் சிங் தன்னுடைய அமானுஷ்ய சக்திகளுக்காக இந்த பகுதியில் மிகவும் புகழ் பெற்றவராவார்.
பத்து நாட்களுக்கு நடக்கும் இந்த திருவிழாவிற்கு எண்ணற்ற மனநலம் குன்றிய பக்தர்கள் வருகை தந்து 'மசான்ட்ஸ்' என்றழைக்கப்படும் துறவிகளினால் குணப்படுத்தப்படுவார்கள். இது மட்டுமல்லாமல் தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.