உத்தரே பகுதியில் இருக்கும் கக்யு மடம், மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது. இந்த மடம் இயற்கை அழகை அள்ளித் தெளிக்கும் மிக முக்கிய இடமாக விளங்குகிறது.
இந்த இடத்திலிருந்து டென்டாம் பூங்கா மற்றும் அதன் அருகில் பாய்ந்தோடும் அழகிய ஆறு ஆகியவற்றின் காட்சியை மிகத் தெளிவாகப் பார்க்க முடியும். மேலும் இந்த மடத்தில் ஏராளமான சுவர் சித்திரங்கள் உள்ளன. இந்த சித்திரங்கள் பார்ப்போரின் மனங்கள் மற்றும் கருத்துக்களைக் கவரும் வகையில் இருக்கின்றன.