பொக்கு தேவ்தா கோயில், யமுனா நதியின் கிளை நதியான டோன்ஸ் நதியோரத்தில், நெட்வார் கிராமத்தில் அமையப்பெற்றுள்ளது. இப்பகுதியில் உள்ள மற்றுமிரு புகழ் வாய்ந்த கோயில்கள், கர்ணா மந்திர் மற்றும் துரியோதன் மந்திர் ஆகியனவாகும்.
முழு கிராமமும், அழகிய பைன், சிர் மற்றும் டியோடர் மரங்களால் சூழப்பட்டுக் காட்சியளிக்கிறது. சுற்றுலாப் பயணிகள் சக்ரத்தாவிலிருந்து சக்ரத்தா-ஷிம்லா சாலையில் அமைந்துள்ள தியூனியை அடைந்து, பின் அங்கிருந்து நெட்வார் கிராமத்தைச் சென்றடைய வேண்டும்.
இப்பள்ளத்தாக்கில் இருந்து செல்லும் குறுகலான பாதை, ஒரு இரும்புப் பாலத்தைச் சென்றடைகிறது. இப்பாலம், பயணிகளை பொக்கு தேவ்தா கோயிலுக்கு அழைத்துச் செல்லக்கூடியதாகும்.