மூன்றாவது சயாஜிராவ் மஹாராஜாவால் 1879-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த பூங்கா, 45 ஹெக்டேர் பரப்பளவிலான தோட்ட மைதனங்களையும், மலர் கடிகாரம், இரண்டு அருங்காட்சியகங்கள், ஒரு கோளரங்கம், மிருகக்காட்சி சாலை மற்றும் ஒரு பொம்மை இரயில் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.
கோளரங்கத்திற்கு அடுத்ததாக இருக்கும் வானவியல் பூங்காவில் இந்தியாவின் பழமையான வானவியல் கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பூங்கா காமாடி பாக் என்ற பெயரைக் கொண்டிருக்கிறது.