உடலில் வலுவும், உள்ளத்தில் உரமும் இருப்பின் நீங்கள் வாகமண் மலைவாசஸ்தலத்திற்கு வரும்போது மலையேற்றத்தில் ஈடுபடுவது நிச்சயம் ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்.
பலவித வண்ணமலர்ச்செடிகளும் ஆர்க்கிட் தாவரங்களும் நிரம்பியிருக்கும் இந்த பசுமைப்பள்ளத்தாக்குகளின் வழியே மலையேற்றத்தில் ஈடுபடுவது இயற்கை ரசிகர்களை பரவசமூட்டக்கூடிய சாகசப்பயணமாக இருக்கும்.
நீர்வீழ்ச்சிகளை ஒட்டி சலசலத்தோடும் சிற்றோடைகளில் கால்நனைத்து கடந்து பலவித எழிற்காட்சிகளை இங்கு தரிசிக்கலாம். இப்படி மலையேற்றத்தின் மூலமாக காட்டுப்பகுதியை ஊடுறுவும்போது இயற்கை மற்றும் இயற்கையை தவிர வேறு கலப்படம் எதுவுமே இல்லை எனும் நிதர்சனமானது ஏதோ ஒரு சொர்க்கத்துக்குள் நுழைந்தவிட்ட பிரமையை நமக்கு ஏற்படுத்தும் வல்லமை படைத்தாகும்.
மலையேற்றத்துக்கு மிகவும் தோதான இயற்கை அமைப்பை வாகமண் மலைவாசஸ்தலம் கொண்டுள்ளது ஒரு விசேஷமான அம்சமாகும். அது மட்டுமல்லாமல் இங்கு பாராசூட் பறப்பு, சிகரமேற்றம் மற்றும் பாறையேற்றம் போன்ற அதிதீவிர சாகச அனுபவங்களும் விருப்பமுள்ளவர்களுக்கு காத்திருக்கின்றன.
வாகமண் மலைப்பிரதேசத்தில் ‘ட்ரெக்கிங்’ சென்று திரும்பினால் அது என்றென்றைக்கும் நினைவை விட்டு அகலா ஞாபகப்படங்களாக பதிந்துவிடும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.