வைசாலி அருங்காட்சியகத்தில் பழங்கால வைசாலியைச் சேர்ந்த கலைப்பொருட்கள் கண்டறியப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. 1971-ம் ஆண்டு இந்திய தொல்பொருள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தின் காட்சிப் பொருட்களில் பாலர்கள் வம்சத்தைச் சேர்ந்த பெருமதிப்பு வாய்ந்த புத்தரின் சிற்பம், அவர் அழகிய கிரீடம், அற்புதமான கழுத்துப்பட்டை (நெக்லஸ்) மற்றும் பிற ஆபரணங்கைள அணிந்தவாறு உள்ளது.
மேலும், புத்தரின் தலையில்லாத சிலை ஒன்றும் பூமிபார்ஸா முத்திரையில் உள்ளது. இந்த காட்சிப் பொருட்களில், உள்ளூர் கிராமவாசிகளால், சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் கண்டறியப்பட்ட பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன.
இவை இந்த அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக தரப்பட்டவை. விஷ்ணு, உமா சங்கர் போன்றோரின் சிற்பங்களும், வேறு சில மனித உருவங்களும், குரங்குகள், பாம்புகள், குதிரைகள், எருதுகள் போன்ற மிருகங்களின் சிற்பங்களும் இங்கே வைக்கப்பட்டுள்ளன.
மௌரியர்கள், குப்தர்கள், குஷாணர்கள் மற்றும் சுங்கர்கள் காலத்தைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.