வால்ப்பாறையில் இருந்து 10 கிலோமீட்டர்கள் தொலைவில், பெரிய காரமலை தேனீர் தொழிற்சாலையினால் சொந்தமாக நடத்தப்படுகின்ற, ஒரு தேனீர் தோட்டத்தின் உள்ளே பாலாஜி கோவில் அமைந்து இருக்கிறது.
இந்த தெய்வத்தை வழிபடுவதற்காக பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் இவ்விடத்திற்கு கூட்டம் கூட்டமாக வருகின்றார்கள். பாலாஜி கோவில் வால்ப்பாறையில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களுள் ஒன்று. இது கோயம்புத்தூரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இருக்கிறது.
விஷ்ணு பகவான் இந்தக் கோயிலில் பாலாஜி வடிவத்தில் வழிபடப்படுகிறார். சாந்தம் தவழும் தேனீர் தோட்டங்களுக்கும், மலைகளுக்கும் இடையே இது அமைக்கப்பட்டு இருக்கின்றது.
புகைப்படம் எடுத்தலும், அலைப்பேசி பயன்படுத்துவதும் கோவிலுக்குள் தடைசெய்யப்பட்டு இருக்கின்றது. திருப்பதி பாலாஜி கோவிலைப் போலவே இங்கும் தவறாமல் பூஜைகள் நிகழ்த்தப்பெறுகின்றன.
கடவுளின் அருளைப் பெருவதற்காக தொலைதூரத்தில் இருந்து பக்தர்களை இக்கோவில் ஈர்க்கின்றது. கோவிலின் நுழைவாயிலுக்கு மேல் வாகனங்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. அங்கிருந்து அரை கிலோமீட்டர் தூரம் வரை நடந்து தான் கோவிலுக்கு செல்ல வேண்டும்.