வால்ப்பாறை மலைப்பிரதேசத்தில் இருந்து 26 கிலோமீட்டர்கள் தொலைவில் சின்னக்கல்லார் அருவி அமைந்து இருக்கிறது. இவ்விடம் நாட்டிலேயே இரண்டாவது அதிகமான மழைப்பொழிவை பெருவதால், இது தென் இந்தியாவின் சீராப்புஞ்சி என்று அழைக்கப்படுகின்றது.
சுற்றிலும் பச்சைப்பசுமையினால் சூழப்பட்டு இருக்கும் சின்னக்கல்லார் அமைதியான சூழலை கொடுக்கின்றது. அருவிக்கு மேலே அமைக்கப்பட்டு இருக்கும் தொங்கு பாலம் பயணத்தை சாகசம் நிறைந்ததாக மாற்றுகின்றது.
சின்னக்கல்லார் எப்போதுமே மேகங்களினாலும், பனியினாலும் மூடப்பட்டு காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. வால்ப்பாறையில் இருந்து சின்னக்கல்லாருக்கு பயணம் செய்வது சிறந்த அனுபவமாக இருக்கும்.