தட்கேஸ்வர் ஆலயம் என்று ஏன் பெயர் வந்தது என்றால், இவ்வாலயத்திற்கு மேற்கூரைகள் இல்லை. சூரிய ஒளியானது சிவலிங்கத்தின் மேல் எப்போதும் பட்டுக்கொண்டே இருக்கும். மேலும் இங்கு பலவகையான நிறைய சிவலிங்கங்கள் உள்ளன.
வல்சாத் மாவட்டத்திலுள்ள மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதி பர்மேரா ஆகும். வல்சாத்திற்கு மிக அருகிலுள்ளது இந்த புகழ்பெற்ற மலை வாசஸ்தலம். இம்மலை உச்சியில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் ஒரு விழா நடத்தப்படுகிறது.
பர்மேரா மலைக்குன்றின் மேல் அமைந்துள்ள பர்மேரா கோட்டை மராட்டிய மன்னரான சத்ரபதி சிவாஜியால் கட்டப்பட்டது. கோட்டைகளை கட்டுவதில் மிகவும் விருப்பமானவர் சிவாஜி. அவர் இறக்கும்போது அவருக்கு சொந்தமாக 300 கோட்டைகள் இருந்தன என்று சொல்லப்படுகிறது.
குஜராத் மாநிலத்தின் நவ்சாரி நகரத்தின் அருகிலுள்ள சிறிய கிராமமே தண்டி. 1930-ஆம் ஆண்டு மகாத்மா காந்தியடிகள் தமது புகழ்பெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தை இக்கிராமத்தை நோக்கிதான் துவக்கினார்.
உப்பு மீது வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து தனது சத்தியாக்கிரகப்...
வல்சாத் மாவட்டத்திலுள்ள சிறிய நகரம் சஞ்சான். இந்தியாவில் பார்சிக்கள் வசிக்கும் நகரங்களில் முக்கியமானது இந்நகரம்.ஜொராஷ்டிரியர்கள் ஈரானைவிட்டு வெளியேற்றப்பட்டபோது குஜராத் மாநிலத்திற்கு அகதிகளாக வந்து இங்கு தங்கி இந்நகரத்தை உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது.
...