குஜராத் மாநிலத்தின் நவ்சாரி நகரத்தின் அருகிலுள்ள சிறிய கிராமமே தண்டி. 1930-ஆம் ஆண்டு மகாத்மா காந்தியடிகள் தமது புகழ்பெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தை இக்கிராமத்தை நோக்கிதான் துவக்கினார்.
உப்பு மீது வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து தனது சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தொடங்கி ஏராளமான தொண்டர்களுடன் அகமதாபாத்திலிருந்து தண்டிக்கு யாத்திரையாகப் பயணம் மேற்கொண்டார்.