தசாஸ்வமேத் மற்றும் ராணா மஹால் ஆகிய படித்துறைகளுக்கு இடையே அமைந்துள்ள தர்பங்கா தொடர் ராஜ குடும்பத்தின் பெயரிலேயே வழங்கப்பட்டு வருகிறது.
இப்படித்துறை தவிர்த்து, நதியின் கரையோரத்தில் நிகழும் சடங்குகள் மற்றும் இதர சம்பிரதாயங்களை ராஜ குடும்பத்தினர் கண்ணுறும் வகையில் 1900 களில், ஒரு பிரம்மாண்டமான அரண்மனை, ராஜ குடும்பத்தினரால் இங்கு நிர்மாணிக்கப்பட்டது.
பிரபலமான ஒரு இந்து நம்பிக்கையின் படி, வாரணாசியின் படித்துறைகளில் இறப்பு அல்லது ஈமக்கிரியைகள் நிகழ்ந்தால், அது அந்த ஆத்மாவை நேரடியாக சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் பாதையாகக் கருதப்படுகிறது.
இதர படித்துறைகளைப் போன்றே, தர்பங்கா படித்துறையும் ஒரு திறந்தவெளி சுடுகாடாகவே சேவையாற்றுகிறது. இப்படித்துறை சற்று சரிவானதாகவும், ஒடுக்கமானதாகவும் இருந்தாலும் பாபுவா பாண்டே படித்துறைக்கு அருகில் இது அகலமானதாகக் காணப்படுகிறது. இங்கு சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரு கோயிலும் உள்ள