துர்க்கைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள துர்க்கை கோயிலானது, வாரணாசியின் ராம்நகர் பகுதியில் அமைந்துள்ளது. வங்காள மஹாராணி ஒருவரால் 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படும் இக்கோயில், தற்போது பனாரஸ் ராஜ குடும்பத்தினரின் ஆளுமையின் கீழ் உள்ளது.
இக்கோயில் வட இந்திய கட்டிட பாணியான நாகரா பாணியில் கட்டப்பட்டுள்ளது. ஒரு சதுரமான நடைமேடையின் மேல் நிலைநிறுத்தப்பட்டுள்ள இக்கோயில் துர்கா கந்த் என்றழைக்கப்படும் ஒரு குளத்தின் எதிர்ப்புறத்தில் அமைந்துள்ளது.
நான்கு மூலைகளிலும் உயரமான கண்காணிப்பு கோபுரங்களைக் கொண்ட இக்கோயில், ஷிகாரா என்றழைக்கப்படும் பல அடுக்கு கூம்புகளையும் கொண்டு காணப்படுகிறது. துர்கா தேவி அணிந்துள்ள ஆடையின் நிறமான செங்கல் கலரிலேயே இக்கட்டிடத்தின் வண்ணப்பூச்சும் அமைந்துள்ளது.
இங்குள்ள துர்க்கையின் சிலை மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல; அது சுயம்புவாக உருவாகி இந்நகரை தீய சக்திகளிடமிருந்து காத்து வருகிறது என்ற நம்பிக்கை இங்கு பரவலாக உலவி வருகின்றது.
நவராத்திரி மற்றும் இதர விழாக்களின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலில் திரள்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக, இக்கோயிலில் இந்துக்கள் அல்லாதோர் கோயில் பிரகாரம் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்; மூலஸ்தானத்திற்குள் இவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
இக்கோயில் பிரகாரத்தில் அதிக அளவில் காணப்படும் மனிதக்குரங்குகளினால் இது குரங்குக் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.